பதிவு செய்த நாள்
07 அக்2011
16:49
மும்பை: உணவு பணவீக்கம் அதிகரித்த போதிலும் இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 16 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது . நிப்ஃடியும் 136 புள்ளிகளை தொட்டது. ஐரேப்பாவில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியிலும் , இந்திய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் துவங்கியது. இன்று பங்கு வர்த்தகம் முடிவடையும் போது சென்செக்ஸ் 440 புள்ளிகளுடன் 16232.54 ஆகவும்,தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 136 புள்ளிகளுடன் 4888.05 ஆகவும் இருந்தது. இதில் ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் எகிறின. ரிலையன்ஸ் பங்குள் 4.46 சதவீதமும், இன்போசிஸ் பங்குகள் 2.15சதவீதம் இருந்தன.தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 அதிகரித்துள்ளது. நேற்று கி. 2482 ஆக இருந்தது. இன்று கி. 2494 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ. 19 ஆயிரத்து 952 ஆக உள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கி. 57.35 ஆக இருந்தது. நேற்று கி.56.30 ஆக இருந்த வெள்ளி இன்று கி. 57.35 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|