பேங்க் ஆப் இந்தியா நியூசிலாந்தில் புதிய கிளைபேங்க் ஆப் இந்தியா நியூசிலாந்தில் புதிய கிளை ... பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வேண்டும் தொழில் துறையினர் வேண்டுகோள் பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வேண்டும் தொழில் துறையினர் வேண்டுகோள் ...
சென்செக்ஸ் 440 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2011
01:52

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஒரு சில தினங்களாக, 16ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் இருந்து சென்செக்ஸ், நேற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வந்த செய்தியை அடுத்து, இதர ஆசிய நாடுகளில் பங்கு வியாபாரம் சிறப்பாக இருந்தது. ஆனால், ஒரு சில ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில் நுட்பம், வங்கி, உலோகம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், அடுத்த ஒருசில வாரங்களில், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை யை வெளியிட பல நிறுவனங்கள் தயாராக உள்ளன. இக்காலாண்டில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல் பாட்டில் பின்னடைவு ஏற்படும் நிலையில், ஒட்டுமொத்த அளவில் அது பங்குவர்த்தகத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத் தும் என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 440.13 புள்ளிகள் அதிகரித்து, 16,232.54 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 16,347.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,148.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய இரு நிறுவனங்கள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 136.75 புள்ளிகள் உயர்ந்து, 4,888.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 4,922.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4.861.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)