சென்ற மூன்றாவது காலாண்டில் தனியார் பங்கு முதலீடு ரூ.9,200 கோடியை எட்டியதுசென்ற மூன்றாவது காலாண்டில் தனியார் பங்கு முதலீடு ரூ.9,200 கோடியை எட்டியது ... மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால் தீபாவளி ஜவுளி ரகங்களின் விலை 30 சதவீதம் உயர்ந்தது மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால் தீபாவளி ஜவுளி ரகங்களின் விலை 30 ... ...
உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையில் ஏற்றம்:உணவுப் பொருள் பணவீக்கம் 9.41 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2011
01:54

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், செப்., 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 9.13 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. ஆக, உணவுப் பொருட் களின் பணவீக்கம், 0.28 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், ஆண்டின் அடிப்படையில், காய்கறிகள் விலை, 14.88 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது. உருளைக் கிழங்கின் விலை, 9.34 சதவீதமும், வெங்காயத்தின் விலை 10.58 சதவீதமும் உயர்ந்துள்ளது.இது தவிர, பழங்கள் விலை, 11.72 சதவீதமும், பால் விலை, 10.35 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் 10.33 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள் விலை 4.57 சதவீதமும், பருப்பு வகைகள் விலை 7.54 சதவீதமும் அதிரித்துள்ளது. அதேசமயம், முக்கிய உணவுப் பொருட்களின் விலை, 10.84 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 11.43 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கீட்டில், முக்கிய உணவுப் பொருட்களின் பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.உணவு சாரா பொருட்கள் பிரிவில், நூலிழை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் தாதுப் பொருட்களின் விலை, 10.77 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 12.89 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கான பணவீக்கம், தொடர்ந்து, 14.69 சதவீதம் என்ற அளவிலேயே மாற்றமின்றி உள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்புத் துறை பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு சாரா பொருட்களின் பண வீக்கத்தால், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பொதுப் பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 9.78 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. பண வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 12 முறை உயர்த்தியுள்ளது. இது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது. எனினும், இதை மிதமான அளவில் நிலை நிறுத்த, ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் இணைந்து, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)