வறுமையில் வாடுவோருக்காக அமெரிக்கா 16,700 கோடி டாலர் செலவுவறுமையில் வாடுவோருக்காக அமெரிக்கா 16,700 கோடி டாலர் செலவு ... வங்கிகள் வழங்கிய கடன் 19% வளர்ச்சி வங்கிகள் வழங்கிய கடன் 19% வளர்ச்சி ...
ரயில்வே துறையின் வருவாய் ரூ.48,947 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2011
11:25

புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், இந்திய ரயில்வே துறை ஈட்டிய வருவாய் ரூ.48,947 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 10.40 சதவீதம் (ரூ.44,338 கோடி) அதிகமாகும். இதே காலத்தில், சரக்கு போக்குவரத்து பிரிவு வாயிலான வருவாய் ரூ.29,449 கோடியிலிருந்து 10.15 சதவீதம் அதிகரித்து ரூ.32,439 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, பயணிகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.14,018 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.12,689 கோடியை விட 10.47 சதவீதம் அதிகமாகும். கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தில், பிற சிறப்பு போக்குவரத்து பிரிவில் வருவாய் ரூ.1,378 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,235 கோடியாக இருந்தது. ஆக, இப்பிரிவில் வருவாய் வளர்ச்சி 11.60 சதவீதமாக உள்ளது. முதல் ஆறு மாதங்களில், ரயில் பயணிகளின் எண்ணிக்கை 412.10 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 390.70 கோடியாக இருந்தது. ஆக, பயணிகள் எண்ணிக்கை 5.47 சதவீதம் உயர்ந்துள்ளது. புறநகர் பகுதிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை முறையே 207.30 கோடி மற்றும் 204.80 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது முறையே 4.22 சதவீதம் மற்றும் 6.77 சதவீதம் அதிகம் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)