பதிவு செய்த நாள்
09 அக்2011
11:25
புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், இந்திய ரயில்வே துறை ஈட்டிய வருவாய் ரூ.48,947 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 10.40 சதவீதம் (ரூ.44,338 கோடி) அதிகமாகும். இதே காலத்தில், சரக்கு போக்குவரத்து பிரிவு வாயிலான வருவாய் ரூ.29,449 கோடியிலிருந்து 10.15 சதவீதம் அதிகரித்து ரூ.32,439 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, பயணிகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.14,018 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.12,689 கோடியை விட 10.47 சதவீதம் அதிகமாகும். கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தில், பிற சிறப்பு போக்குவரத்து பிரிவில் வருவாய் ரூ.1,378 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,235 கோடியாக இருந்தது. ஆக, இப்பிரிவில் வருவாய் வளர்ச்சி 11.60 சதவீதமாக உள்ளது. முதல் ஆறு மாதங்களில், ரயில் பயணிகளின் எண்ணிக்கை 412.10 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 390.70 கோடியாக இருந்தது. ஆக, பயணிகள் எண்ணிக்கை 5.47 சதவீதம் உயர்ந்துள்ளது. புறநகர் பகுதிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை முறையே 207.30 கோடி மற்றும் 204.80 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது முறையே 4.22 சதவீதம் மற்றும் 6.77 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|