ரயில்வே துறையின் வருவாய் ரூ.48,947 கோடியாக உயர்வு ரயில்வே துறையின் வருவாய் ரூ.48,947 கோடியாக உயர்வு ... என்.எம்.டீ.சி. நிறுவனம்ரூ.2,450 கோடியில் விரிவாக்கம் என்.எம்.டீ.சி. நிறுவனம்ரூ.2,450 கோடியில் விரிவாக்கம் ...
வங்கிகள் வழங்கிய கடன் 19% வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2011
16:23

மும்பை: நடப்பு நிதி ஆண்டில், செப்டம்பர் 23ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய வங்கிகள் வழங்கிய கடன்கள் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கிச் சேவை துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரத ரிசர்வ் வங்கி, வாரந்தோறும் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டு வாரத்திற்கான புள்ளி விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இரு வார காலத்தில் இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள் ரூ.18,860 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்டிருந்த கடன்களை விட 19.5 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில், செப்டம்பர் 23ம் தேதி வரையிலான காலத்தில் வங்கிகள் வழங்கியுள்ள மொத்த கடன்கள் ரூ.40.93 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உணவு தானிய கொள்முதலுக்காக, இந்திய உணவு கழகத்திற்கு வழங்கப்பட்ட கடன் ரூ.5,171 கோடி குறைந்து ரூ.68,245 கோடியாகவும், உணவு அல்லாத கடன்கள் ரூ.24,030 கோடி அதிகரித்து ரூ.40.25 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கிகள் திரட்டிய டெபாசிட்டுகள் ரூ.8,232 கோடி அதிகரித்து ரூ.55.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 17.4 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)