பதிவு செய்த நாள்
11 அக்2011
16:53
மும்பை: ஏற்றத்துடன் துவங்கி சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை: இன்று காலை வர்த்தக துவங்கிய போது குறியீட்டு எண் 110 புள்ளிகளுடன் 16 ஆயிரம் வரை சென்றது. நேற்றைய பங்குச்ச்நதை சென்செக்ஸ் 324 புள்ளிகளுடன், 16557.23 ஆக இருந்தது , நிப்ஃடி 91.55 புள்ளிகளுடன் 4979.60 இருந்தது. ஆனால் இன்று பங்கு வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் 16668.15 வரை சென்றது பின்னர் படிப்படியாக சரிவை கண்டது. இறுதியில் 20.76 புள்ளிகள் பெற்று 16536.47 குறியீட்டுடன் நிலை கொண்டது.இதன் சதவீதம் -0.13 ஆகும். தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 5.25 புள்ளிகள் பெற்று குறியீட்டு எண் 4974.35 ஆக இருந்தது. இதன் சதவீதம் -0.11 ஆகும். ஆனால் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. மேலும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ. 49.33 என்ற விகிதத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|