தென்னிந்திய வர்த்தகசபை தலைவராக ஜவகர் வடிவேலு தேர்வுதென்னிந்திய வர்த்தகசபை தலைவராக ஜவகர் வடிவேலு தேர்வு ... நாட்டின் கோதுமை உற்பத்தி 8.60 கோடி டன்னாக உயரும் நாட்டின் கோதுமை உற்பத்தி 8.60 கோடி டன்னாக உயரும் ...
சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: தீபாவளிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்:சரத் பவார் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2011
00:13

புதுடில்லி:நடப்பு 2011-12ம்சந்தைப் படுத்தும் பருவத்தில் (அக்.-செப்.),சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதியளிப்பது குறித்து தீபாவளிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர்சரத் பவார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு2010-11ம் ஆண்டுசந்தைப்படுத்தும் பருவத்தில், பொது உரிமம் மூலம் மூன்று தவணைகளில் 15 லட்சம் டன்சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஏற்கனவே 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தவணையின் கீழ் இன்னும் நிர்ணயித்த அளவிற்குசர்க்கரை ஏற்றுமதி செய்யப்படவில்லை. ஏற்றுமதியாகும்பட்சத்தில்,சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும். அதற்குள் தீபாவளி பண்டிகை முடிந்து விடும்.சர்க்கரை உற்பத்தியைப் பொருத்தே, ஏற்றுமதி குறித்து தீர்மானிக்கப்படும்.பண்டிகை காலம் என்பதால், நடப்பு பருவத்தில், கரும்பு அரவைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் பருவத்தில் 2.43 கோடி டன்னாக இருந்தசர்க்கரை உற்பத்தி, நடப்பு 2011-12ம் பருவத்தில் 2.46 கோடி டன்னாக உயரும் என்று உணவு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. எனினும், இது 2.5 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரைத் துறை, நடப்பாண்டில் 2.60-2.65 கோடி டன்சர்க்கரை உற்பத்தி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாகசர்க்கரை உற்பத்தி, தேவையை விட அதிகரித்ததால், சென்ற ஆண்டு 26 லட்சம் டன்சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. பொது உரிமம் மற்றும் முன்கூட்டிய உரிமத் திட்டம் ஆகியவற்றின் கீழ்,சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.இவ்வாறுசரத் பவார் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)