பதிவு செய்த நாள்
14 அக்2011
00:13
புதுடில்லி:நடப்பு 2011-12ம்சந்தைப் படுத்தும் பருவத்தில் (அக்.-செப்.),சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதியளிப்பது குறித்து தீபாவளிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர்சரத் பவார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு2010-11ம் ஆண்டுசந்தைப்படுத்தும் பருவத்தில், பொது உரிமம் மூலம் மூன்று தவணைகளில் 15 லட்சம் டன்சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஏற்கனவே 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தவணையின் கீழ் இன்னும் நிர்ணயித்த அளவிற்குசர்க்கரை ஏற்றுமதி செய்யப்படவில்லை. ஏற்றுமதியாகும்பட்சத்தில்,சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும். அதற்குள் தீபாவளி பண்டிகை முடிந்து விடும்.சர்க்கரை உற்பத்தியைப் பொருத்தே, ஏற்றுமதி குறித்து தீர்மானிக்கப்படும்.பண்டிகை காலம் என்பதால், நடப்பு பருவத்தில், கரும்பு அரவைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் பருவத்தில் 2.43 கோடி டன்னாக இருந்தசர்க்கரை உற்பத்தி, நடப்பு 2011-12ம் பருவத்தில் 2.46 கோடி டன்னாக உயரும் என்று உணவு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. எனினும், இது 2.5 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரைத் துறை, நடப்பாண்டில் 2.60-2.65 கோடி டன்சர்க்கரை உற்பத்தி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாகசர்க்கரை உற்பத்தி, தேவையை விட அதிகரித்ததால், சென்ற ஆண்டு 26 லட்சம் டன்சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. பொது உரிமம் மற்றும் முன்கூட்டிய உரிமத் திட்டம் ஆகியவற்றின் கீழ்,சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.இவ்வாறுசரத் பவார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|