சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: தீபாவளிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்:சரத் பவார் அறிவிப்புசர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: தீபாவளிக்கு பிறகு முடிவு ... ... ரூ.10,000 கோடிக்கு ரயில்வே கடன் பத்திரங்கள் வெளியீடு ரூ.10,000 கோடிக்கு ரயில்வே கடன் பத்திரங்கள் வெளியீடு ...
நாட்டின் கோதுமை உற்பத்தி 8.60 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2011
00:15

புதுடில்லி:நாட்டின் கோதுமை உற்பத்தி, வரும் ரபி பருவத்தில்,சாதனை அளவாக, 8.60 கோடி டன்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மத்தியில் இருந்து, ஏப்ரல் மாதம் மத்திய காலம் வரை ரபி பருவமாகும். நடப்பு அக்டோபர் மாதத்தில், இவ்வார இறுதியில், ரபி பருவம் தொடங்க உள்ளது. இப்பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி புதியசாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சகச் செயலர் பி.கே.பா” கூறிய தாவது: கடந்த ரபிபருவத்தில் (அக்.,-ஏப்.,), நாட்டின் கோதுமை உற்பத்தி, 8.59 கோடி டன் என்றஅளவில் உயர்ந்து, புதியசாதனை படைக்கப்பட்டது.இதையடுத்து, முன்கூட்டிய மதிப்பீட்டின் படி,வரும் ரபி பருவத்தில்,கோதுமை உற்பத்தி, 8.40 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், எதிர் பார்த்ததை விட, பருவ மழை நன்கு பெய்துள்ளதால் விளை நிலங்களில் ஈரப்பதம் நன்கு உள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து அணைக்கட்டு களிலும், பாசனத்திற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் உள்ளது. இதற்கு முன், இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை இத்தகைய அம்சங்கள் காரணமாக கோதுமை உள்ளிட்ட ரபி பருவ பயிர்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமையை பொருத்தவரை, வரும் ரபி பருவத்தில், உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி, 8.60 கோடி டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கோதுமை பயிருக்கு தேவையான அளவை விட,சூரிய வெப்பமும் கிடைத்துள்ளதால் பூச்சித் தாக்குதல் போன்ற பிரச்னைகளும் இல்லை. எனவே விவசாயிகள், ரபி பருவத்தில் கோதுமை விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரபி பருவத்தில், முதலில் மத்திய பிரதேசத்தில் கோதுமை நடவுப் பணி தொடங்கும். அடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இப்பணி நடைபெறும்.ரபி பருவத்தில் வட மாநிலங்களில் கோதுமை, கடுகு, பார்லி, பட்டாணி மற்றும் பருப்பு வகைகள் அதிகளவில்சாகுபடி செய்யப்படுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)