பதிவு செய்த நாள்
14 அக்2011
00:15
புதுடில்லி:நாட்டின் கோதுமை உற்பத்தி, வரும் ரபி பருவத்தில்,சாதனை அளவாக, 8.60 கோடி டன்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மத்தியில் இருந்து, ஏப்ரல் மாதம் மத்திய காலம் வரை ரபி பருவமாகும். நடப்பு அக்டோபர் மாதத்தில், இவ்வார இறுதியில், ரபி பருவம் தொடங்க உள்ளது. இப்பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி புதியசாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சகச் செயலர் பி.கே.பா” கூறிய தாவது: கடந்த ரபிபருவத்தில் (அக்.,-ஏப்.,), நாட்டின் கோதுமை உற்பத்தி, 8.59 கோடி டன் என்றஅளவில் உயர்ந்து, புதியசாதனை படைக்கப்பட்டது.இதையடுத்து, முன்கூட்டிய மதிப்பீட்டின் படி,வரும் ரபி பருவத்தில்,கோதுமை உற்பத்தி, 8.40 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், எதிர் பார்த்ததை விட, பருவ மழை நன்கு பெய்துள்ளதால் விளை நிலங்களில் ஈரப்பதம் நன்கு உள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து அணைக்கட்டு களிலும், பாசனத்திற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் உள்ளது. இதற்கு முன், இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை இத்தகைய அம்சங்கள் காரணமாக கோதுமை உள்ளிட்ட ரபி பருவ பயிர்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமையை பொருத்தவரை, வரும் ரபி பருவத்தில், உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி, 8.60 கோடி டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கோதுமை பயிருக்கு தேவையான அளவை விட,சூரிய வெப்பமும் கிடைத்துள்ளதால் பூச்சித் தாக்குதல் போன்ற பிரச்னைகளும் இல்லை. எனவே விவசாயிகள், ரபி பருவத்தில் கோதுமை விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரபி பருவத்தில், முதலில் மத்திய பிரதேசத்தில் கோதுமை நடவுப் பணி தொடங்கும். அடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இப்பணி நடைபெறும்.ரபி பருவத்தில் வட மாநிலங்களில் கோதுமை, கடுகு, பார்லி, பட்டாணி மற்றும் பருப்பு வகைகள் அதிகளவில்சாகுபடி செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|