நாட்டின் கோதுமை உற்பத்தி 8.60 கோடி டன்னாக உயரும்நாட்டின் கோதுமை உற்பத்தி 8.60 கோடி டன்னாக உயரும் ... "சென்செக்ஸ்' 74 புள்ளிகள் சரிவு "சென்செக்ஸ்' 74 புள்ளிகள் சரிவு ...
ரூ.10,000 கோடிக்கு ரயில்வே கடன் பத்திரங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2011
00:16

புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ரயில்வே துறை, வரி விலக்கு பெற்ற கடன் பத்திரங்களை வெளியிட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது."மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்' என்று நிதி ஆணையர் பொம்பா பப்பர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: ரயில்வே துறை, நடப்பு நிதியாண்டில், நிதிச்சந்தையில் 20 ஆயிரத்து 594 கோடி ரூபாய் கடன் திரட்டுகிறது. இதில், வரி விலக்கு பெற்ற கடன் பத்திரங்கள் வாயிலாக 10ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளது. ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், கடன்பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.ரயில்வே துறை, மாதம் ஒன்றுக்குசராசரியாக 8,000 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை வருவாய்ஈட்டுகிறது.இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். விரிவாக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களால், ரயில்வே துறைக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களின் ஊதியமோ அல்லது அன்றாடப் பணிகளிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், முன்னுரிமையற்ற சில பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக நிதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், கோட்ட பொது மேலாளர்களுக்கு உள்ள மறுநிதி ஒதுக்கீட்டு உரிமை, திரும்பப் பெறப் பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவதிலும் சில குளறுபடிகள் உள்ளன. அவற்றைசரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர அமைச்சகங்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரைக்கும் ஊதிய நிலுவையை நிதியமைச்சகம் வழங்கு கிறது. ஆனால், ரயில்வே அமைச்சகம் மட்டும் தான், ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை, தானே வழங்குவதுடன், ஓய்வூதியதாரருக்கான ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.ரயில்வே கையாளும்சரக்குகளுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியைமத்திய அரசு, டிசம்பர் இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளது. இது, நெருக்கடியைசந்தித்துள்ள ரயில்வே துறைக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.எனினும், இதர சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை கோரி வருகிறோம் என பொம்பா பப்பர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)