பதிவு செய்த நாள்
14 அக்2011
00:16
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ரயில்வே துறை, வரி விலக்கு பெற்ற கடன் பத்திரங்களை வெளியிட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது."மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்' என்று நிதி ஆணையர் பொம்பா பப்பர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: ரயில்வே துறை, நடப்பு நிதியாண்டில், நிதிச்சந்தையில் 20 ஆயிரத்து 594 கோடி ரூபாய் கடன் திரட்டுகிறது. இதில், வரி விலக்கு பெற்ற கடன் பத்திரங்கள் வாயிலாக 10ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளது. ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், கடன்பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.ரயில்வே துறை, மாதம் ஒன்றுக்குசராசரியாக 8,000 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை வருவாய்ஈட்டுகிறது.இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். விரிவாக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களால், ரயில்வே துறைக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களின் ஊதியமோ அல்லது அன்றாடப் பணிகளிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், முன்னுரிமையற்ற சில பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக நிதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், கோட்ட பொது மேலாளர்களுக்கு உள்ள மறுநிதி ஒதுக்கீட்டு உரிமை, திரும்பப் பெறப் பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவதிலும் சில குளறுபடிகள் உள்ளன. அவற்றைசரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர அமைச்சகங்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரைக்கும் ஊதிய நிலுவையை நிதியமைச்சகம் வழங்கு கிறது. ஆனால், ரயில்வே அமைச்சகம் மட்டும் தான், ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை, தானே வழங்குவதுடன், ஓய்வூதியதாரருக்கான ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.ரயில்வே கையாளும்சரக்குகளுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியைமத்திய அரசு, டிசம்பர் இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளது. இது, நெருக்கடியைசந்தித்துள்ள ரயில்வே துறைக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.எனினும், இதர சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை கோரி வருகிறோம் என பொம்பா பப்பர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|