பதிவு செய்த நாள்
14 அக்2011
00:17
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று சற்று மந்தமாக இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித் திருந்த நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது. நேற்று முன்தினம் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி, பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிக எண்ணிக்கை யில் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால், மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் மோட்டார் வாகனம், பொறியியல், மருந்துஉள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. இருப்பினும், வங்கி, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த் தகம் முடியும்போது, 74.47 புள்ளிகள் குறைந்து, 16,883.92 புள்ளிகளில் நிலை கொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 17,084.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,854.03 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' 21.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,077.85 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,136.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,067.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|