பதிவு செய்த நாள்
16 அக்2011
00:21

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 7ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 74.90 கோடி டாலர் (3,595 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து 223 கோடி டாலராக (14 லட்சத்து 98 ஆயிரத்து 704 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்., 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 123 கோடி டாலர் (5,904 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 148 கோடி டாலராக (14 லட்சத்து 95 ஆயிரத்து 104 கோடி ரூபாய்) குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணியின் மதிப்பு, 50 லட்சம் டாலர் (24 கோடி ரூபாய்) குறைந்து, 260 கோடி டாலராக (12 ஆயிரத்து 480 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பும், 90 லட்சம் டாலர் (43 கோடி ரூபாய்) சரிவடைந்து, 449 கோடி டாலராக (21 ஆயிரத்து 552 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற்றமும் இல்லை. அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|