நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்குநடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய ... ... "டாஸ்மாக்' சரக்கு விற்பனை 30 சதவீதம் எகிறியது "டாஸ்மாக்' சரக்கு விற்பனை 30 சதவீதம் எகிறியது ...
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2011
10:26

புதுடில்லி: நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெருநகரங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும், தற்போது மின் வெட்டு அதிகரித்துள்ளது. தேசிய அனல் மின் கழகத்துக்குச் சொந்தமான ஐந்து அனல் மின் நிலையங்களில், நிலக்கரி பற்றாக்குறையாக இருப்பதால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை சப்ளை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 180 "ரேக்'குகளில் நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில், 169 "ரேக்' நிலக்கரி, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில், இந்த அளவு, கணிசமாக அதிகரிக்கப்படும். கடந்த மூன்று நாட்களில், வடக்கு பகுதிகளில் உள்ள மின் நிலையங்களுக்கு, 140 "ரேக்' நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரியின் அளவு குறித்து, மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எந்த மின் நிலையத்திலாவது, குறைவாக நிலக்கரி இருப்பது தெரியவந்தால், அங்கு கூடுதலாக நிலக்கரி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும்படி, நிலக்கரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)