பதிவு செய்த நாள்
17 அக்2011
00:05
சென்னை:வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், பிரிட்டிஷ் கவுன்சில், அவான் மொபிலிட்டி சொல்யூ ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய சேவையைத் துவக்கியுள்ளது.இதுகுறித்து, பிரிட்டிஷ் கவுன்சிலின் (தென் இந்தியா) இயக்குனர் பால் செல்லர்ஸ் கூறியதாவது: இந்தியாவில் வேலை தேடுவோரின் திறனை அதிகரிக்கும் வகையில், "ஜாப் சீக்கர் ' என்ற அனிமேஷன் பயிற்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். மொபைல் போன் மூலம் கற்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதில், பிரிட்டிஷ் கவுன்சில் முன்னோடி யாக செயல்படுகிறது. ஐபோன், ஆன்ட்ராய்டு போன் ஆகியவற்றுக்கென பல மென்பொருள் தொகுப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன.இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து வீடியோ கார்டுகளை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை. இந்த வசதியை, டாட்டா டொகோ மோ வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வாறு பால் செல்லர்ஸ் கூறினார். டாட்டா டொகோமோ வாடிக்கையாளர்கள், 5333300 என்ற எண்ணில் எஸ்.ஈ.ஈ.கே. என்று ஆங்கிலத்தில் குறுந்தகவல் அனுப்பி, நாளொன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் திறன் வளர்ப்பு பயிற்சியைப் பெறலாம். இந் நிகழ்ச்சியில், டாட்டா டெலி சர்வீஸ் நிறுவனத்தின் தமிழக வட்டார தலைமை செயல் அதிகாரி ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|