வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பிரிட்டிஷ் கவுன்சிலின் புதிய சேவைவேலைவாய்ப்பு திறன் பயிற்சி பிரிட்டிஷ் கவுன்சிலின் புதிய சேவை ... கரூர் மாவட்டத்தில் 7 மணி நேரத்தில் 3.52 கோடி ரூபாய்க்கு மது விற்பனை  தூள் கரூர் மாவட்டத்தில் 7 மணி நேரத்தில் 3.52 கோடி ரூபாய்க்கு மது விற்பனை தூள் ...
கட்டுமான பணிகளில் சுணக்க நிலையால் நாட்டின் சிமென்ட் உற்பத்தி குறைந்தது: -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2011
00:07

நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிந்த அரையாண்டில் 8.10 கோடி டன்னாகசரிவடைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 8.30 கோடி டன்னாக இருந்தது.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டில் சிமென்ட் பயன்பாடு குறைந்து வருகிறது.இதனால், சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தியை குறைத்து, விலையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. உற்பத்தி திறன்: சென்ற 2010-11ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறனில் 78சதவீத அளவிற்கே பயன்படுத்தப்பட்டது. அதாவது, நிறுவனங்கள், அவற்றின் மொத்த சிமென்ட் உற்பத்தியை மேற்கொள்ளாமல் குறைத்துக் கொண்டன. இது, நடப்பு நிதியாண்டின் இதே காலத்தில் 75சதவீதமாக குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில், சிமென்ட் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி திறனில் 70சதவீத அளவிற்கே பயன்படுத்தியுள்ளன. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 74சதவீதமாக இருந்தது. சென்ற செப்டம்பர் மாதம், நாட்டின் சிமென்ட் உற்பத்தி 1.60 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இது,மொத்த உற்பத்தி திறனில் 72சதவீதமாகும். இது குறித்து ஜே.கே.லஷ்மி சிமென்ட் நிறுவனத்தின் இயக்குனர் சைலேந்திரசவுஸ்கி கூறுகையில்,"சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நாடு முழுவதும் சிமென்டிற்கான தேவை குறைந்துள்ளது. இரண்டாவதாக, பல்வேறு நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்ற போதிலும், உற்பத்தியை முழு அளவில் அதிகரிக்காமல் உள்ளன. பயன்பாடு: திட்டக் குழு,11வது ஐந்தாண்டு காலத்தில் (2007-12),30 கோடிடன் சிமென்ட் தேவைப்படும் என்று மதிப் பிட்டிருந்தது. ஆனால், சிமென்ட் பயன்பாடு, அதை விட பெரிதும் குறைவாகவே உள்ளது. மேலும் அரசின் கட்டுமானத் திட்டங்களும் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. இவற்றின் காரணமாக சிமென்ட்டிற்கான தேவை குறைந்துள்ளது' என்றார்.இது தவிர, சிமென்ட் நிறுவனங்களிடம், கடந்த ஆண்டின் சிமென்ட் இருப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றையும், நடப்பு ஆண்டின் சிமென்ட் உற்பத்தியையும் சேர்த்து விற்க வேண்டிய நிலையில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அந்த அளவிற்கு சிமென்ட்டிற்கான தேவை இல்லையென்பதால், நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இது குறித்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "தென்னிந்திய சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தி திறனில் 60-65சதவீத அளவிற்கு தான் பயன்படுத்துகின்றன. வடஇந்திய நிறுவனங்களின் உற்பத்தி 75-80 சதவீத அளவிற்கு உள்ளது. மொத்த உற்பத்தி திறனில்சராசரியாக 70சதவீத அளவிற்குத் தான் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. பயன்படுத்தப்படு கிறது. அதேசமயம், சென்ற ஆண்டு இறுதியில், விரிவாக்க திட்டங்களின் மூலம் நிறுவனங்கள் கூடுதலாக பெற்ற சிமென்ட் உற்பத்தி திறன், முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது' என்றார். சிமென்ட் நிறுவனங்கள்,சந்தைக்கு சிமென்ட் அனுப்புவது, மாதந்தோறும் குறைந்து வருகிறது. இது, ஆண்டுக்கணக்கில், 1.5சதவீத வளர்ச்சி என்ற அளவில் மிகக் குறைவாகவே உள்ளது.நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சிமென்ட் நிறுவனங்கள், மிக அதிக அளவாக 86-88சதவீத அளவிற்கு, அவற்றின் உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்கின்றன. வடக்கே இது 75-80சதவீதமாகவும், மேற்கு மற்றும் தெற்கில் இதுசராசரியாக 60சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. லாப வரம்பு: தென்னிந்தியாவில் உள்ள சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் லாப வரம்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், சென்ற ஆண்டு அக்டோபர் முதல் உற்பத்தியை குறைத்துக் கொண்டன. இதை பின்பற்றி, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களை சேர்ந்த நிறுவனங்களும், சென்ற ஜனவரி முதல் உற்பத்தியை குறைத்துள்ளன.பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, சிறிய சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறன் பயன் பாடு குறைந்த அளவிற்கே உள்ளது. ஏ.சி.சி நிறுவனம், அதன் மொத்த உற்பத்தி திறனில் 78-80சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இது, சென்ற ஆண்டின் தேசியசராசரி உற்பத்தியில் 80-83சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது 70சதவீதமாக குறைந்துள்ளது. பருவமழைக்கு பிறகு, செப்டம்பர் மாதம் சிமென்டிற்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாததால், சிமென்ட் உற்பத்தி உயராமல் உள்ளது. மேலும், ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் காரணமாகவும், சிமென்ட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)