பதிவு செய்த நாள்
18 அக்2011
00:10
புதுடில்லி : எத்தனால் விலையை உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு, சென்ற ஆகஸ்ட் மாதம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் எத்தனால் விலையை, 27 ரூபாய் என நிர்ணயித்தது. இந்நிலையில், திட்டக்குழு உறுப்பினர் சவுமித்ரா சவுத்ரி தலைமையிலான குழு, வரிகள் இல்லாமல், பெட்ரோல் விலையை விட 20 சதவீதம் குறைவாக, எத்தனால் விலையை நிர்ணயிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, இந்திய சக்கரை ஆலைகள் சங்க தலைவர் நரேந்திர முர்கும்பி கூறுகையில், "ஒரு லிட்டர் எத்தனால் விலை, 32 ரூபாயாக உயர்த்த வேண்டும்; இது, ஏற்றுமதி செய்யப்படும் விலையை (38 ரூபாய்) விட குறைவாகும்' என்றார். எத்தனால் கொள்கை குறித்து, மத்திய அரசு திட்டவட்டமான முடிவு எடுக்காததால், சர்க்கரை ஆலைகள், எத்தகைய திட்டங்களையும், முதலீட்டையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளன. ஆலைகள், 50 ஆயிரம் கோடி ரூபாயை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன. நடப்பு சர்க்கரை பருவத்தில், இது 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மத்திய அரசு, எத்தனால் விலையை உயர்த்த வேண்டும்; மேலும் எத்தனால் குறித்து திட்டவட்டமான கொள்கையை அறிவிக்க வேண்டும் என்றும், நரேந்திர முர்கும்பி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|