பதிவு செய்த நாள்
18 அக்2011
16:50
மும்பை : ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் எதிரொலியாக ஆசிய பங்குச் சந்தையில் இன்றும் சரிவே காணப்பட்டது. இன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குசந்தை சரிவுடனேயே முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 276.80 புள்ளிகள் சரிந்து 16748.29 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 80.75 புள்ளிகள் சரிந்து 5037.50 புள்ளிகளாக இருந்தது. துவங்கியதில் இருந்தே இறங்குமுகத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் மதியத்திற்கு மேல் மேலும் சரிவுடன் காணப்பட்டது. ஐ.டி., நிறுவனங்களின் இந்த நிதி ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டின் நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் நிலை திருப்திகரமாக இல்லாததால் ஐ.டி., நிறுவனப்பங்குகளின் மதிப்பு சரிந்து காணப்பட்டன. இதை தொடர்ந்து பங்குசந்தையில் பெரும்பாலான பங்குகள் விற்கும் போக்கு காணப்பட்டதால், மும்பை பங்குச் சந்தை சரிவுடனேயே முடிந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|