நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள்வழங்கிய கடன் 24 சதவீதம் சரிவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள்வழங்கிய கடன் 24 சதவீதம் சரிவு:- பிசினஸ் ... ... ஹீரோ மோட்டோகார்ப் "ஹீரோ' பிராண்டில் முதல் மோட்டார் சைக்கிள் ஹீரோ மோட்டோகார்ப் "ஹீரோ' பிராண்டில் முதல் மோட்டார் சைக்கிள் ...
இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 346 கோடி டாலர்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:28

இந்திய நிறுவனங்கள்,சென்ற செப்டம்பர் மாதம், அயல்நாடுகளில் 346 கோடி டாலர் அளவிற்கு முதலீடு மேற் கொண் டுள்ளன. இது, முந்தைய ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 51 சதவீதம் (228 கோடி டாலர்) அதிக மாகும்.இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் உள்ள விவரம்: இந்திய நிறுவனங்கள், சென்ற செப்டம்பர் மாதம், அயல்நாடுகளில் முதலீடு தொடர்பாக, 401 பரிவர்த்தனைகளை மேற் கொண்டுள்ளன.இதில்,மிக அதிக அளவிலான முதலீட்டை ஜி.வி.கே., பவர் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது.இந்நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள அதன் ஜி.வி.கே., கோல் டெவலப்பர்ஸ் என்ற கூட்டு நிறுவனத்தில், 141 கோடி டாலர் முதலீடு மேற் கொண்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனம், போக்குவரத்து, கிடங்கு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈ.டி.எச்.எல்., கம்யூனிகேஷன்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், மொரீஷியசை சேர்ந்த அதன் ஈ.டி.எச்.எல்., கம்யூனிகேஷன்ஸ் மொரீஷியஸ் என்ற துணை நிறுவனத்தில், 77 கோடியே 68 லட்சம் டாலர் முதலீடு செய்துள்ளது. இந்த துணை நிறுவனம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.இதே வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சிங்கப்பூரை சேர்ந்த டாட்டா ஸ்டீல் ஏஷியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில், அதன் தாய் நிறுவனமான டாட்டா ஸ்டீல் 17 கோடியே 35 லட்சம் டாலர் முதலீடு செய்துள்ளது. அது போன்று,ஆர்.எச்.சி., ஹோல்டிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், இதே வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மொரீஷி யசில் உள்ள அதன் துணை நிறுவனத் தில்,11 கோடியே 36 லட்சம் டாலர் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளது. ஜிந்தால் ஸ்டீல் நிறுவனம், சைப்ரசில் உள்ள அதன் ராலேல் ஹோல்டிங்ஸ் என்ற துணை நிறுவனத்தில், 7 கோடியே 86 லட்சம் டாலர் முதலீடு செய்துள்ளது. இத்துடன், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஜிந்தால் சா ஹோல்டிங்ஸ் என்ற மற்றொரு துணை நிறுவனத்தில், 4 கோடியே 83 லட்சம் டாலர் முதலீடு செய்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில், இந்திய நிறுவனங்கள், 1,901 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன.அதே சமயம், நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 95 சதவீதம் அதிக ரித்து, 889 கோடி டாலரில் இருந்து, 1,737 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)