பதிவு செய்த நாள்
24 அக்2011
00:32
ஐதராபாத்:வரும் 2015ம் ஆண்டில், இந்தியா - மலேசியா நாடுகளுக்கு இடை யிலான பரஸ்பர வர்த்தகம், 1,500 கோடி டாலராக (69 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மலேசிய தூதரக அதிகாரி (வர்த்தகம்) ஷா நிசாம் அகமது தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஷா கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் நேரடியான வர்த்தகத்தை மேற்கொள் வதற்கு, மலேசியா விருப்பமாக உள்ளது. ஆசிய நாடுகளில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் மிகப் பெரிய அளவிலான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகி றோம்.இந்தியா, மலேசியா நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் வலுவான உறவு உள்ளது. இந்தியா, சிங்கப்பூருக்கு அடுத்தபடியான வர்த்தகத்தை மலேசியாவுடன் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு, 900 கோடி டாலர் (41 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) மதிப் பிற்கு, இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் நடந்துள்ளது. வரும், 2015ம் ஆண்டில், 1,500 கோடி டாலராக (69 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஷா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|