வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் இறக்குமதி 40 சதவீதம் உயரும்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் இறக்குமதி 40 சதவீதம் உயரும் ... கச்சா எண்ணெய் விலை உயர்வு கச்சா எண்ணெய் விலை உயர்வு ...
டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க தீவிரம் : தீபாவளி விற்பனை இலக்கு ரூ.250 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
09:23

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் நடந்த அபரிமிதமான மது விற்பனையை தொடர்ந்து, தீபாவளி விற்பனைக்காக, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு, "டாஸ்மாக்' கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி மாலை முதல் அக்டோபர் 19ம் தேதி மாலை வரையிலும், 21ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. விடுமுறை காரணமாக, தேர்தலுக்கு முன், டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை மூன்று மடங்கு உயர்ந்தது. அக்டோபர் 13 முதல் 15ம் தேதி மாலை 5 மணி வரை, மூன்று நாட்களில் மட்டும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை, 500 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை (அக்.,25) முதல் மூன்று நாட்களுக்கு மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களிலும் தட்டுப்பாடு இன்றி கடைகளில் சரக்கு கிடைக்க, சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.எம்.எப்.எல்., பீர், ஒயின் மதுபானங்கள், டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று வரை தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு, 17 லட்சம் கேஸ் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களும், 8.50 லட்சம் கேஸ் பீரும் சப்ளை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக்கு முந்தைய நாள் (25ம் தேதி) 75 கோடி ரூபாய்க்கும், 27ம் தேதி, 75 கோடி ரூபாய்க்கும் ஆக மொத்தம், 250 கோடி ரூபாய்க்கு இச்சமயத்தில் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், சரக்கு விற்பனை மூன்று மடங்கு அதிகரித்தது. பல கடைகளில் இருப்பு சரக்கு உட்பட அனைத்து சரக்குகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. தற்போது, அனைத்து கடைகளுக்கும், மூன்று நாளுக்குத் தேவையான சரக்குகள் சப்ளை செய்யப்பட்டு விட்டன. மேலும், தீபாவளி நாளில் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சரக்குகளை சப்ளை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)