பதிவு செய்த நாள்
27 அக்2011
10:13
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்புறப்பகுதிகளில் புடலங்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம், வடுகபாளையம், ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் பந்தல் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள், உள்ளூர் சந்தை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. தற்போது, பந்தல் காய்கறிகளுக்கான சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுப்புறப்பகுதிகளில் அதிகளவில் பந்தல் காய்கறிகளான புடலை, பாகல் ஆகிய காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், புடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தைக்கும் புடலை காயின் வரத்து அதிகரித்துள்ளது. உள்ளூர் சந்தைக்கு தினமும் இரண்டு டன் வரை புடலங்காய் வரத்துள்ளது. சந்தைக்கு வரும் காய்கறி கேரளப்பகுதிகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|