நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்கள் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்கள் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் ... நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய்உற்பத்தி 1.92 கோடி டன்னாக உயர்வு நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய்உற்பத்தி 1.92 கோடி ... ...
உணவுப் பொருள் பணவீக்கம் 11.43 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
00:47

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்டோபர் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 11.43 சதவீத மாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 10.60 சதவீதமாக இருந்தது. ஆக, உணவுப் பொருள் பணவீக்கம், 0.83 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து இரண்டு வாரங்களாக இரட்டை இலக்க அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், காய்கறிகள், பால் மற்றும் புரதப் பொருள்கள் சார்ந்த உணவுப்பொருள்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.காய்கறிகள் விலை,25 சதவீத அளவிற்கு அதி கரித்துள்ளது.மேலும்,பழங்கள்(11.96 சதவீதம்),பால்(10.85 சதவீதம்), மீன், முட்டை,இறைச்சி (12.82 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந் தது. இது தவிர,பருப்பு வகைகளின் விலை,9.06 சதவீதமும்,உணவு தானி யங்கள்,4.62 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும், வெங்காயத்தின் விலை, 18.93 சதவீதமும், கோதுமை விலை, 0.95 சதவீதமும் மற்றும் உருளைக் கிழங்கின் விலை0.45 சதவீதம் என்ற அளவிலும் குறைந்திருந்தது.முக்கிய பொருட்களின் விலை11.75 சத வீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.இது,இதற்கு முந்தைய வாரத்தில், 11.18 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப் பட்டது.மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில்,முக்கிய பொருட்களின் பங்களிப்பு,20 சதவீதத்திற் கும் அதிகமாக உள்ளது.உணவு சாராத பொருட்களின் பிரிவின் கீழ் உள்ள,நூலிழை,எண்ணெய்வித்துக்கள் மற்றும் தாதுப் பொருட்களின் விலை, 7.67 சதவீதம் குறைந்துள்ளது.இது,முந்தைய வாரத்தில், 8.51 சதவீதம் என்ற அள வில் அதிகரித்து காணப்பட்டது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில்,எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை,14.70 சத வீதம்என்ற அளவில் குறைந்துள் ளது இது, இதற்கு முந்தைய வாரத்தில்,15.17 சதவீதம் உயர்ந்து காணப்பட் டது. நாட்டின் பொதுப் பணவீக்கம், 2010, டிசம்பர் முதல்,9 சதவீதத்திற்கும் அதிகமாக என்ற அளவில் இருந்து வரு கிறது.இது,கடந்த செப்டம்பரில்,9.72 சதவீதமாக இருந்தது.பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நட வடிக் கையாக,வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை,ரிசர்வ் வங்கி,2010, மார்ச் மாதம் முதல்,தற்போது வரை,13 முறை உயர்த்தியுள்ளது.மேலும்,வரும் டிசம் பருக்குள் தேவை மற்றும்அளிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு குறைந்து, வரும் மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம், 7 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)