பதிவு செய்த நாள்
28 அக்2011
00:50
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின்,ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை யிலான ஆறு மாத காலத்தில்,நாட் டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 1.90 கோடி டன்னில் இருந்து1.92கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதே காலத் தில், கச்சாஎண்ணெய்சுத்திகரிப்பு4.7சதவீதம் உயர்ந்து 8.04 கோடி டன்னில் இருந்து,8.37 கோடிடன்னாக அதிக ரித்துள்ளது. அதே சமயம், இதே காலத் தில், நாட்டின் எரிவாயு உற்பத்தி வளர்ச்சி, 8.5 சதவீதம் குறைந்து 2,542 கோடி கன மீட்டர் என்ற அளவில் இருந்து, 2,440 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. நாட்டின் எரிவாயு உற்பத்தி,சென்ற செப்டம்பர் மாதம் 6.4 சதவீதம் குறைந்து, 395 கோடிகன மீட்டராக சரிவ டைந்துள்ளது.இது,சென்ற 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 422 கோடி கன மீட்டர் என்ற அளவில் உயர்ந்து காணப் பட்டது.அதே சமயம்,இதே காலத்தில் கச்சா எண்ணெய்உற்பத்தி,31.15 லட்சம் டன் என்ற அளவில் இரு ந்து,31.18லட்சம் டன்னாக மிகச் சிறிய அள விற்கே உயர்ந்துள்ளது.இதே காலத்தில், எண்ணெய்சுத்திகரிப்பு நிறுவனங் களின் உற்பத்தி,1.21 கோடி டன் என்ற அளவில் இருந்து 1.27 கோடி டன் என்ற அளவிற்கு சற்றே உயர் ந்துள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு 6.1 சதவீதம் அதிகரித்து1.06 கோடி டன்னில் இருந்து, 1.12 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவைப்பாடு உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் கச்சா எண்ணெய்,எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி போதுமான அளவிற்கு அதிகரிக்கவில்லை.அதனால், நாட்டின் கச்சா எண்ணெய்இறக்கு மதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் மொத்த கச்சா எண்ணெய்தேவையில்,80 சத வீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது. பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள மும்பை எண்ணெய்வயலில்,கச்சா எண்ணெய்உற்பத்தி,சென்ற செப்டம்பர் மாதம் 3.4 சதவீதம் குறைந்து13.49லட்சம் டன்னாக சரிவடைந்தது.இதனால், நாட்டின் கச்சா எண்ணெய்உற்பத்தி பாதிக்கப்பட்டது.அதே சமயம், கெய்ரன் இந்தியா நிறுவனத்தின் ராஜஸ் தான் எண்ணெய்வயலில், கச்சா எண்ணெய் உற்பத்தி 1 சதவீதம் அதிகரித்து,5.20 லட்சம் டன்னில் இருந்து,5.25 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக, சென்ற செப்டம்பர் மாதம், நாட்டின் ஒட்டு மொத்த கச்சா எண்ணெய்உற்பத்தி, மிகச் சிறிய அளவிற்கு அதிகரித்துள்ளது. இதே மாதத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிழக்கு கடலோர எரிவாயு வயல்களிலும் உற்பத்தி குறைந்து போனது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த எரிவாயு உற்பத்தி குறைந்தது. தற்போது, நாட்டின் எரிவாயு தேவை,நாளொன்றுக்கு 20 கோடி கன மீட்டர் என்ற அளவிற்கு உள்ளது.எரிவாயு விற்பனையை மேற்கொண்டு வரும்பொதுத்துறையை சேர்ந்த கெயில்இந்தியா நிறுவனம்,சென்ற செப்டம்பர் மாதம் நாளொன் றுக்கு 11.8 கோடி கன மீட்டர் எரிவாயுவை கையாண்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்கிய 2.90 கோடி கனமீட்டர் எரிவாயு உள்பட,உள்நாட்டின் மொத்த எரிவாயு உற்பத்தி 9.2 கோடி கனமீட்டர் என்ற அளவில் உள் ளது. வெளிநாடுகளில் இருந்து 3.2 கோடி கன மீட்டர்எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது.நாட் டின் எரிவாயு உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால்,எரிவாயு இறக்குமதி மேலும் அதிகரிக் கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.உள்நாட்டில்,சென்ற செப்டம்பர் மாதம், எண்ணெய்நிறுவனங்களின்சுத்திகரிப்பு உற்பத்தி,4.4 சதவீதம் உயர்ந்து 1.27 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப் பரே ஷன் நிறுவனம்,நாட்டிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை மேற்கொண்டு வருகிறது. இந் நிறு வனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு, சென்ற செப்டம்பர் மாதம், 20.7 சதவீதம் உயர்ந்து 40 லட்சம் டன்னாக அதிக ரித்துள்ளது. தனியார் துறையை சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையின் உற் பத்தி, இதே மாதத்தில்7.4 சதவீதம் உயர்ந்து29.2லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.அதே சமயம்,எஸ்ஸார் நிறுவ னத்தின்சுத்திகரிப்பு உற்பத்தி, 41.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் வாதினார் சுத்திகரிப்பு ஆலை, விரிவாக்கம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக 35 நாட்கள் மூடப்பட்டதால், உற்பத்தி குறைந்துள்ளது. இதே மாதத்தில் பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு 1.06 கோடி டன்னில் இருந்து, 1.12 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.இதே மாதத்தில், டீசல் பயன்பாடு 46 லட்சம் டன்னாகவும்,பெட்ரோல் பயன்பாடு12 லட்சம் டன் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு பயன்பாடு 13 லட்சம் டன் என்ற அளவிற்கு உயர்ந்துள் ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|