பதிவு செய்த நாள்
29 அக்2011
00:19
சென்னை:எல்.ஐ.சி., நிறுவனத்தின் வலைத் தளத்தில், காக்னிஸென்ட் நிறுவனத்திற்கு தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், இச்சேவையை எல்.ஐ.சி., நிறுவனத்தின் செயல் இயக்குனர் பீ.வேணுகோபால் தொடங்கி வைத்தார். இதன் மூலம், எல்.ஐ.சி., வலைதளம் வாயிலாக, உலகெங் கிலும் உள்ள காக்னிஸென்ட் ஊழியர்கள் செலுத்தும் ஆயுள் காப்பீட்டு பிரிமிய விவரங்களை நிறுவனம் அறிந்து கொள்ள முடியும். மேலும், ஊழியர்கள், தாங்கள் செலுத்திய காப்பீட்டு பிரிமிய தொகை குறித்த தகவல்களை, வருமான வரி கணக்கீட்டிற்காக, நிறுவனத்திடம் தனியே தெரிவிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், எல்.ஐ.சி., மண்டல மேலாளர் டீ.டீ.சிங், காக்னிஸென்ட் துணை தலைவர் (சர்வதேச நிதி) கே.தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|