பதிவு செய்த நாள்
29 அக்2011
09:20
மும்பை : இந்தியாவின் ஹோட்டல் பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமான இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் (ஐஹெச்சிஎல்)நிறுவனம், சீனாவில் தாஜ் ஹோட்டல் திறக்க தீர்மானித்துள்ளது. இதன்மூலம், சீன மண்ணில் ஹோட்டல் அமைக்கும் முதல் இந்திய ஹோட்டல் நிறுவனம் என்ற பெருமையை ஐஹெச்சிஎல் நிறுவனம் பெறுகிறது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்த ஐஹெச்சிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் ரேமண்ட் பிக்சன் கூறியதாவது, தங்கள் நிறுவனம் ஹோட்டல் வர்த்தகத்தை இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்ஒருபகுதியாகவே, சீனாவில் தாஜ் ஹோட்டல் கட்ட முடிவெடுத்திருக்கிறோம். ஐஹெச்சிஎல் நிறுவனம், 2011-12ம் நிதியாண்டில் புதிதாக 13 ஹோட்டல்கள் மற்றும் 1,840 அறைகளையும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் புதிதாக 19 ஹோட்டலகளையும் மற்றும் 2,591 அறைகளையும் நிறுவ உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 2011ம் செப்டம்பர் மாத நிலவரப்படி, ஐஹெச்சிஎல் நிறுவனம், 110 ஹோட்டல்களும் மற்றும் 13,237 அறைகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|