பதிவு செய்த நாள்
30 அக்2011
01:38
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 86 கோடி டாலர்(4,128 கோடி ரூபாய்) அதிகரித்து,31 ஆயிரத்து 835 கோடி டாலராக(15 லட்சத்து 28 ஆயிரத்து 80 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 14ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி 526.90 கோடி டாலர் (25 ஆயிரத்து 818 கோடி ரூபாய்) உயர்ந்து, 31 ஆயிரத்து 750 கோடி டாலராக (14 லட்சத்து 60 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் அன்னியச் செலாவணி அதிகரித்துள்ள அதேசமயம்,சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணி யின் மதிப்பு,10 லட்சம்டாலர் குறைந்து,263.50 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர். மதிப்பும், 20 லட்சம் டாலர் சரிந்து, 454 கோடி டாலராக குறைந்துள்ளது.கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற் றமும் இல்லாமல், 2,866.70 கோடி டாலராக உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள் ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|