இயந்திரம் மூலம் திருப்பதி லட்டு வழங்க தேவஸ்தானம் திட்டம்இயந்திரம் மூலம் திருப்பதி லட்டு வழங்க தேவஸ்தானம் திட்டம் ... ஏர் இந்தியா விமான நேரம் மாற்றம் ஏர் இந்தியா விமான நேரம் மாற்றம் ...
சிலிண்டர் சப்ளையால் ரூ.13 ஆயிரத்து 820 கோடி நஷ்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2011
10:35

வீடுகளுக்கான சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடந்த ஆறு மாதங்களில், 13 ஆயிரத்து 820 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வீட்டு உபயோகத்திற்கு, 14.2 கிலோ, வர்த்தக உபயோகத்திற்கு, 19 கிலோ, தொழிற்சாலை உபயோகத்திற்கு, 47.5 கிலோ என, மூன்று ரகங்களில் விற்கப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை, தற்போது, 405 ரூபாய்க்கு சென்னையில் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.270 நஷ்டம் அரபு நாடுகளில் ஒரு டன் எரிவாயு, 803.81 டாலர் (38 ஆயிரத்து 582 ரூபாய்) விற்கிறது. இறக்குமதி செலவு, இழப்பு, துறைமுகக் கட்டணம், கலால் வரி, சுத்திகரிப்பு செலவு, சிலிண்டரில் நிரப்பும் கட்டணம், ஆயில் நிறுவனங்களின் லாபம் ஆகியவை சேர்த்து, டில்லி நகரை வைத்து கணக்கிட்டால், வீட்டு சிலிண்டர் ஒன்றின் அசல் விலை, 666.31 ரூபாய் வருகிறது.டீலருக்கு வழங்கும் விலை 373.43 ரூபாய், மத்திய அரசு வழங்கும் மானியம் 22.58 ரூபாய் போக, ஆயில் நிறுவனங்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு, 270.29 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, ஆறு மாதங்களில் ஆயில் நிறுவனங்களுக்கு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு வகையில் மட்டும், 13 ஆயிரத்து 820 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளன.இதுபோல், டீசல் விற்பனை மூலம், 37 ஆயிரத்து 719 கோடியும், கெரசின் மூலம், 13 ஆயிரத்து 361 கோடி ரூபாய் என, மொத்தம், 64 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அறிக்கை சமர்ப்பித்துள்ளன.வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், டீசல் விலையையும் உயர்த்த, மத்திய அரசை நிர்பந்திப்பதற்கான உத்தியாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளதாக, பொதுமக்கள் கருதுகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)