பதிவு செய்த நாள்
30 அக்2011
12:56
புதுடில்லி : மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் காலாண்டு நிகரலாபம் 59.81 சதவீதம் சரிவடைந்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இந்நிறுவனம் பெற்றுள்ள நிகரலாபம் ரூ.240.44 கோடியாகும். மானேசர் ஆலையில் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக ஏற்பட்ட உற்பத்தி இழப்பு, அந்நிய செலாவணி இழப்பு ஆகியவன இந்நிறுவனத்தின் நிகரலாப சரிவிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாருதி சுசுகி நிறுவனம் குஜராத்தில் 1500 ஏக்கர் பரப்பளவில் புதிய உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ரூ.594.24 கோடியை நிகரலாபமாக பெற்றது. 2008-09ம் நிதியாண்டின் 3வது காலாண்டிற்கு பிறகு இந்நிறுவனம், லாபத்தில் மிகப் பெரிய சரிவை தற்போது சந்தித்து வருகிறது. இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானமும் 14.38 சதவீதம் சரிந்து ரூ.7,831.62 கோடியாக உள்ளது. வாகன விற்பனையும் 19.56 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|