ஏர் இந்தியா விமான நேரம் மாற்றம்ஏர் இந்தியா விமான நேரம் மாற்றம் ... ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஆந்திர அரசு திட்டம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஆந்திர அரசு திட்டம் ...
மாருதி நிறுவன காலாண்டு நிகரலாபம் 60% சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2011
12:56

புதுடில்லி : மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் காலாண்டு நிகரலாபம் 59.81 சதவீதம் சரிவடைந்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இந்நிறுவனம் பெற்றுள்ள நிகரலாபம் ரூ.240.44 கோடியாகும். மானேசர் ஆலையில் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக ஏற்பட்ட உற்பத்தி இழப்பு, அந்நிய செலாவணி இழப்பு ஆகியவன இந்நிறுவனத்தின் நிகரலாப சரிவிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாருதி சுசுகி நிறுவனம் குஜராத்தில் 1500 ஏக்கர் பரப்பளவில் புதிய உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ரூ.594.24 கோடியை நிகரலாபமாக பெற்றது. 2008-09ம் நிதியாண்டின் 3வது காலாண்டிற்கு பிறகு இந்நிறுவனம், லாபத்தில் மிகப் பெரிய சரிவை தற்போது சந்தித்து வருகிறது. இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானமும் 14.38 சதவீதம் சரிந்து ரூ.7,831.62 கோடியாக உள்ளது. வாகன விற்பனையும் 19.56 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)