பதிவு செய்த நாள்
30 அக்2011
14:04
விசாகப்பட்டினம் : இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாக ஆந்திர மாநில பழங்குடியின நலவாரிய அமைச்சர் பி.பாலராஜூ தெரிவித்துள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் மில்லியனியம் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 2நாள் வேலைவாய்ப்பு முகாமை திறந்து வைத்து பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது : அனைவருக்கும் கல்வி மட்டுமின்றி வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தர ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது; ஐடி, பிபிஓ, பார்மா, மருத்துவமனையியல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு கம்பெனிகள் நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 35 ஆயிரம் பட்டாதாரி இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்; மேலும் விப்ரோ, ஹச்எஸ்பிசி, மகேந்திரா சத்யம், இன்ஃபோ டெக், ரிலையன்ஸ், ஹச்டிஎஃப்சி, எஸ்பிஐ உள்ளிட்ட 160 முன்னணி நிறுவனங்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|