பதிவு செய்த நாள்
30 அக்2011
16:32
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் இந்தியாவின் தேயிலை இறக்குமதி 23 சதவீதம் குறைந்துள்ளது. இந்த மாத அளவில் 6.40 மி்ல்லியன் கிலோ தேயிலை மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாத அளவில் இந்தியா 8.32 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை கழக புள்ளிவிபர அறிக்கை தெரிவித்துள்ளது. உலகின் மிக பெரிய தேயிலை இறக்குமதி நாடான இந்தியாவின் தேயிலை இறக்குமதி, தற்போது தேயிலை ஏற்றுமதியை விட மிகக் குறைந்துள்ளது. 2011-2012ம் நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் தேயிலையின் அளவு பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கென்யா, மல்லாவி, நேபாள், ஈரான், இலங்கை, சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா தேயிலை இறக்குமதி செய்து வருகிறது. நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தேயிலை இறக்குமதி 29 சதவீதம் சரிந்து 1.21 மில்லியன் கிலோவாக உள்ளது. இதே போன்று ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களிலும் இந்தியாவின் தேயிலை இறக்குமதி 20 சதவீதம் சரிந்து 10.64 மில்லியன் கிலோவாக இருந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|