பாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்புபாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்பு ...  வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் : ரூ.1,800 கோடிக்கு வீட்டு வசதி கடன் வழங்க இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
00:05

சென்னை: சென்னையைச் சேர்ந்த சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிற்கு வீட்டு வசதிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.தென்மாநிலங்களில், வீட்டு வசதி கடன் சந்தை, மிகப் பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்பைக் கொண்டுள்ளதால், இந்த இலக்கு எட்டப்படும் என, சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:நிறுவனம் வழங்கிய கடன், நடப்பு 2011-12ம் நிதியாண்டின் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில், 59 சதவீதம் அதிகரித்து, 866.31 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 544.36 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் இரு மடங்கு அதிகரித்து, 19.78 கோடியில் இருந்து, 39.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் 54 சதவீதம் உயர்ந்து, 294 கோடியில் இருந்து, 452 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 82 சதவீதம் வளர்ச்சியடைந்து, 11.61 கோடியில் இருந்து, 21.08 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இத்தகைய சிறப்பான வளர்ச்சிக்கு, தென்னிந்திய சந்தை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இப்பிராந்தியத்தில், கிளைகளின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் கிழக்கிந்திய பகுதிகளிலும் விரிவாக்கம் மேற்கொண்டுள்ளோம். அண்மையில் கோல்கட்டாவில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.நிறுவனம், அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக,1,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள், மேலும் 600 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. வரும் 2012-13ம் நிதியாண்டில் உரிமைப் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.நிறுவனம், 30 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதிக் கடனுக்கு 10.95 சதவீதத்தில், மாறுபடும் வட்டி வசூலிக்கிறது. நிறுவனத்தின் நிகர வசூலாகாத கடன் 0.27 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்துள்ளது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் பொதுமேலாளர் மற்றும் குழு தலைவர் (செயல்பாட்டுப் பிரிவு) எஸ்.ராஜகோபாலன், தலைமை நிதி அதிகாரி ஜி.சுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)