வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு ... சென்னையில் வங்கிகளின்  மாநாடு சென்னையில் வங்கிகளின் மாநாடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,000 கோடி நிகர முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
00:07

மும்பை: பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், கடந்த இரண்டு மாதங்களாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, அதிகளவில் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டன.இந்நிலையில், அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான காலத்தில், இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 1,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களிலுமாக, 58 ஆயிரத்து 483 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. இதே காலத்தில், 57 ஆயிரத்து 470 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன.இவ்வகையில், இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 1,014 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, இவற்றின் முதலீடு உயர்ந்துள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், இந்நிறுவனங்கள் தங்கம் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்தன.இனி வரும் மாதங்களில், பங்கு வர்த்தகம் நன்கு இருக்கும் என்ற நிலைப்பாட்டால், இந்தியா உள்ளிட்ட 'பிரிக்ஸ்' நாடுகளில், இந்நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என, ஜியோஜித் பீ.என்.பி. பரிபாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸ் மேத்யூ தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)