பதிவு செய்த நாள்
01 நவ2011
00:07
மும்பை: பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், கடந்த இரண்டு மாதங்களாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, அதிகளவில் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டன.இந்நிலையில், அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான காலத்தில், இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 1,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களிலுமாக, 58 ஆயிரத்து 483 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. இதே காலத்தில், 57 ஆயிரத்து 470 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன.இவ்வகையில், இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 1,014 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, இவற்றின் முதலீடு உயர்ந்துள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், இந்நிறுவனங்கள் தங்கம் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்தன.இனி வரும் மாதங்களில், பங்கு வர்த்தகம் நன்கு இருக்கும் என்ற நிலைப்பாட்டால், இந்தியா உள்ளிட்ட 'பிரிக்ஸ்' நாடுகளில், இந்நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என, ஜியோஜித் பீ.என்.பி. பரிபாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸ் மேத்யூ தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|