வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு ... வட்டி விகிதம் உயர்ந்து வருவதால், கடந்த செப்டம்பரில் : முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியில் சரிவு நிலை வட்டி விகிதம் உயர்ந்து வருவதால், கடந்த செப்டம்பரில் : முக்கிய எட்டு ... ...
சென்னையில் வங்கிகளின் மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
00:08

சென்னை: சென்னையில் வரும் 4 ம் தேதி, இந்திய வங்கிகளின் "பேங்க்கான்' மாநாடு தொடங்க உள்ளது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், இந்திய வங்கிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் மற்றும் லீ மெரிடியன் ஓட்டலில் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஐ.ஓ.பி., தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா கூறியதாவது: இந்தியாவில் 1970 களின் மத்தியில், வங்கிப் பொருளாதார வல்லுனர்கள் பங்கேற்புடன் தொடங்கிய "பேங்க்கான்' மாநாடு, வங்கித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மேம்பாட்டையும் கொண்டு வந்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் இம்மாநாடு, ஐ.ஓ.பி.,யின் தீவிர முயற்சியால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. வங்கியாளர்கள், நிதிக் கொள்கைகளை வகுப்போர், வங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பினர் ஆகியோர், வங்கித் துறையை மேம்படுத்துவதற்கான, ஆக்கபூர்வ சிந்தனைகளையும், சீர்மிகு கருத்துக்களையும் எடுத்துரைக்கும் களமாக, இம்மாநாடு விளங்கும்.வரும் ஆண்டுகளில், வங்கிகள் எதிர்கொள்ள உள்ள சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் வழங்குவதோடு, வங்கித் துறையின் வருவாயை பெருக்கி, வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கான சிறந்த ஆலோசனை மன்றமாகவும் இம்மாநாடு திகழும். இவ்வாறு நரேந்திரா தெரிவித்தார்.பேங்கிபீடியாஇந்தியா ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனரும், பொருளாதார வல்லுனருமான வி.கோபாலன் கூறும்போது, "முந்தைய மாநாடுகள், வங்கிப் பிரச்னைகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளையும், உரிய செயல்பாடுகளையும் வகுப்பதற்கு பயனுள்ளவையாக இருந்தன. இவ்வாண்டு, "இந்திய வங்கித் துறை அடுத்த பத்தாண்டுகளில் சந்திக்க உள்ள போட்டி' என்ற தலைப்பில், மாநாடு நடைபெற உள்ளது, இது, வங்கித் துறையின் வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)