பதிவு செய்த நாள்
01 நவ2011
09:43
மும்பை : செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் நிகரலாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எப்எம்சிஜி வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சோப் மற்றும் டிடர்ஜெண்ட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, நிறுவனத்தின் நிகரலாபம் (கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ. 566 கோடி) இருந்து ரூ. 689 கோடியாக அதிகரித்துள்ளது. இது சதவீததத்தின் அடிப்படையில் 22 சதவீதம் அதிகம் ஆகும். விற்பனையும் 18 சதவீதம் அதிகரித்து ரூ. 4,681 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 5,522 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|