பதிவு செய்த நாள்
02 நவ2011
00:22
புதுடில்லி:இந்தியாவில்,சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், 14 அமைச்சரவைச் செயலர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவை, பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.பிரதமரின் முதன்மைச் செயலர் பூலோக்சட்டர்ஜி தலைமையில், உள்துறை, பாதுகாப்பு, சுற்றுலா, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, விசா, வரி, அடிப்படைக் கட்டமைப்பு, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து, சாலைகள் மற்றும் ஓட்டல்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.இக்குழுவின் முதல் கூட்டம் விரைவில் கூட உள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய், 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சுற்றுலாத் துறை யை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|