சுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழுசுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழு ... பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உள்நாட்டு கார்கள் விற்பனையில் ஏற்ற இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2011
00:25

சென்னை:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் கார்கள் விற்பனை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஒரு சில நிறுவனங்களின் கார்கள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ஒரு சில நிறுவனங்களின் விற்பனை குறைந்து போயுள்ளது.குறிப்பாக, நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி,கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையிலுமாக, 13 முறை வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இக் காலத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதம், 3.75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதுதவிர, மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் கார்களின் விலை அதிகரிப்பாலும், ஒட்டுமொத்த அளவில் வாகனங்கள் விற்பனை வளர்ச்சி குறைந்து போயுள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த நிதியாண்டில், இந்தியாவில் கார்கள் விற்பனை வளர்ச்சி, 30 சதவீதம் என்றளவில் இருந்தது. ஆனால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், கார்கள் விற்பனை வளர்ச்சி, 2-4 சதவீதம் என்றளவில் தான் இருக்கும் என, இந்திய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பாளர் சங்கம், கடந்த மாதம் தெரிவித்திருந்தது. மாருதி சுசூகி இந்தியா: நாட்டின் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, சென்ற அக்டோபர் மாதத்தில், கடந்த ஆண்டின் இதே மாதத் துடன் ஒப்பிடுகையில், 53.20 சதவீதம் சரிவடைந்து, 55 ஆயிரத்து 595 ஆக குறைந்து போயுள்ளது.இந்நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், கடந்த ஒரு சில மாதங்களாக கார்கள் உற்பத்தி வெகுவாக குறைந்து போயுள்ளது.குறிப்பாக, சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், 40 ஆயிரம் கார்கள் உற்பத்தி குறைந்து போனது. இதனால், இந் நிறுவனத்திற்கு, 50 கோடி டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் 54.2 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், கடந்த இரண்டு மாதங்களில், 80 ஆயிரம் கார்கள் உற்பத்தி நின்று போனது. இதையடுத்து, இந்திய கார்கள் சந்தையில், கடந்த ஆண்டு, 50 சதவீதம் என்றளவில் இருந்த இதன் பங்களிப்பு, தற்போது, 40 சதவீதமாக சரிவடைந்துள்ளது. ஹுண்டாய் மோட்டார்இந்தியா: சென்னை இருங்காட்டுக் கோட்டையில் தொழிற்சாலையைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சென்ற அக்டோபர் மாதத்தில், 48 ஆயிரத்து 325 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 7.5 சதவீதம் (52 ஆயிரத்து 217 கார்கள்) குறைவா கும்.இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார்கள் விற்பனை, 5 சதவீதம் குறைந்து, 34 ஆயிரத்து 720 என்ற எண்ணிக்கையிலிருந்து, 33 ஆயிரத்து 1 ஆக குறைந்துள்ளது. ஏற்றுமதி, 12.4 சதவீதம் சரிவடைந்து, 17 ஆயிரத்து 497 என்ற எண்ணிக்கையிலிருந்து, 15 ஆயிரத்து 324 ஆக சரிவடைந்துள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) அரவிந்த் சக்சேனா கூறுகையில்,'கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில், நிறுவனத்தின் கார்கள் விற்பனை நன்கு இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு பண்டிகை காலத்தில், விற்பனை குறைந்து போயுள்ளது. பொருளாதார மந்த நிலையால், ஒட்டுமொத்த அளவில் வாகனத்துறையில், மந்த நிலை காணப்படுகிறது. நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த, 'இயான்' கார்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதுவரை, 9,000 கார்கள் வேண்டி முன்பதிவு செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ்இந்தியா: சென்ற அக்டோபர் மாதத்தில், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 10 ஆயிரத்து 62 கார்களை விற்பனை செய்துள்ளது.இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின்இதே மாதத்தில், 10 ஆயிரத்து51ஆக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை சிறிதளவே உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில்,இந்நிறுவனம், 1,797 ஸ்பார்க் வகை கார்களையும், 5,328 பீட் வகை கார்களையும், 182 சேடன் ஏவியோ கார்களையும், 236 சேடன் ஆப்ட்ரா கார்களையும், 732 சொகுசு வகை சேடன் குரூஸ் வகை கார்களையும் விற்பனை செய்துள்ளது. மகிந்திரா: சென்ற அக்டோபர் மாதத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 20.32 சதவீதம் அதிகரித்து,41 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.இது,கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 34 ஆயிரத்து 435 ஆக இருந் தது.உள்நாட்டில்,இதன் கார்கள் விற்பனை,21.12 சதவீதம் வளர்ச்சிகண்டு,32ஆயிரத்து491என்ற எண்ணிக்கையிலிருந்து, 39 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக,உற்பத்தி குறைக்கப்பட்டிருந்தது.இந்நிலையிலும்,அக்டோபர் மாதத்தில் கார்கள் விற்பனை,20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அண்மையில்,அறிமுகம் செய்த,'எக்ஸ்.யூ.வி.500' கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என, இந் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜிஜூரிகார் தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)