பதிவு செய்த நாள்
02 நவ2011
00:26
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு, இன்னும் தீர்வு காணப்படாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சுணக்கமாக இருந்தது. இது,இந்தியப் பங்குச் சந்தை களிலும் எதிரொலித்தது. இதனால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் இறக்கம் கண்டன. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,பொறியியல்,மோட்டார் வாகனம், வங்கி,எண்ணெய்,எரிவாயு,ரியல் எஸ்டேட், உலோகம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 224.18 புள்ளிகள் குறைந்து, 17,480.83 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,661.78 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,422.47 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 7 நிறுவனப் பங்குளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 68.65 புள்ளிகள் சரிவடைந்து, 5,257.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,310.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,238.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|