சுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழுசுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழு ... பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில்நிதிப் பற்றாக்குறை ரூ.3லட்சம் கோடியாக உயர்வு: -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2011
00:28

நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நிதிப்பற்றாக் குறை, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு உயர்ந்து, 2 லட்சத்து 92ஆயிரத்து 458 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், இது, நடப்பு நிதியாண்டிற்கு மதிப்பிட்டிருந்த நிதிப்பற்றாக்குறை அளவில்,70 சதவீதத் திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாத காலத்திலேயே, இந்த அளவு எட்டப்பட்டுள்ளதால்,எஞ்சியுள்ள ஆறு மாத காலத்திற்கான நிதிப்பற்றாக்குறை, மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதே நிலை நீடித்தால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை,இல க்கு அளவான 4.6 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்று, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாய் குறைந்துள்ள நிலையில், செலவினம் கணிசமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில், 5 சதவீத பங்கு விற்பனை மூலம், 40 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால்,பங்குச் சந்தையில் காணப்படும் சரிவு நிலையால்,பங்கு வெளியீடுகள் பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலான பங்கு விற்பனை மூலம், 1,145 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப் பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், மத்திய அரசின் வருவாய் குறைந்து, செலவினம் அதிகரித்துள்ளது.இதனால்,நிதிப்பற்றாக்குறை, சென்ற ஆண்டு இதே காலத்தை விட,119 சத வீதம் உயர்ந்துள்ளது.வருவாயை விட செலவினம் உயர்ந்து வருவதால், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான கடன் இலக்கை உயர்த்தியுள்ளது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்டதை விட, 53 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்து, பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பதன் மூலம்,மத்திய அரசின் செலவினம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க் கப்படு கிறது. சென்ற செப்டம்பருடன் முடிந்த ஆறு மாத காலத்தில், மத்திய அரசின் வருவாய், முழு நிதியாண்டிற்கான மதிப்பீட் டில், 37 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. மேலும், இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் திரட்டப்பட்டதை விட, 26 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில், மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை, மும்மடங்கு அதிகரித்து, 2 லட்சத்து 33 ஆயிரத்து 428 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, முழு நிதியாண்டிற்கான மதிப்பீட்டில், 76 சதவீதமாகும்.இதே காலங்களில், மத்திய அர சின் செலவினம், 11.4 சதவீதம் அதிகரித்து, 5 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சர்வதேச நில வரங்களால் பாதிக்கப்பட்டுள்ள பங்குச் சந்தை, மீண்டும் எழுச்சி பெறும்பட்சத்தில், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவ னங்களின் பங்கு விற்பனை மூலம், குறிப்பிடத்தக்க தொகையைத்திரட்டும் எனலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)