பதிவு செய்த நாள்
02 நவ2011
00:28
நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நிதிப்பற்றாக் குறை, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு உயர்ந்து, 2 லட்சத்து 92ஆயிரத்து 458 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், இது, நடப்பு நிதியாண்டிற்கு மதிப்பிட்டிருந்த நிதிப்பற்றாக்குறை அளவில்,70 சதவீதத் திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாத காலத்திலேயே, இந்த அளவு எட்டப்பட்டுள்ளதால்,எஞ்சியுள்ள ஆறு மாத காலத்திற்கான நிதிப்பற்றாக்குறை, மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதே நிலை நீடித்தால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை,இல க்கு அளவான 4.6 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்று, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாய் குறைந்துள்ள நிலையில், செலவினம் கணிசமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில், 5 சதவீத பங்கு விற்பனை மூலம், 40 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால்,பங்குச் சந்தையில் காணப்படும் சரிவு நிலையால்,பங்கு வெளியீடுகள் பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலான பங்கு விற்பனை மூலம், 1,145 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப் பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், மத்திய அரசின் வருவாய் குறைந்து, செலவினம் அதிகரித்துள்ளது.இதனால்,நிதிப்பற்றாக்குறை, சென்ற ஆண்டு இதே காலத்தை விட,119 சத வீதம் உயர்ந்துள்ளது.வருவாயை விட செலவினம் உயர்ந்து வருவதால், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான கடன் இலக்கை உயர்த்தியுள்ளது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்டதை விட, 53 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்து, பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பதன் மூலம்,மத்திய அரசின் செலவினம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க் கப்படு கிறது. சென்ற செப்டம்பருடன் முடிந்த ஆறு மாத காலத்தில், மத்திய அரசின் வருவாய், முழு நிதியாண்டிற்கான மதிப்பீட் டில், 37 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. மேலும், இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் திரட்டப்பட்டதை விட, 26 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில், மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை, மும்மடங்கு அதிகரித்து, 2 லட்சத்து 33 ஆயிரத்து 428 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, முழு நிதியாண்டிற்கான மதிப்பீட்டில், 76 சதவீதமாகும்.இதே காலங்களில், மத்திய அர சின் செலவினம், 11.4 சதவீதம் அதிகரித்து, 5 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சர்வதேச நில வரங்களால் பாதிக்கப்பட்டுள்ள பங்குச் சந்தை, மீண்டும் எழுச்சி பெறும்பட்சத்தில், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவ னங்களின் பங்கு விற்பனை மூலம், குறிப்பிடத்தக்க தொகையைத்திரட்டும் எனலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|