பதிவு செய்த நாள்
02 நவ2011
00:30
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 29-30ஆயிரம் கோடி டாலராக (13.92-14.40 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என,மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைச் செயலர் ராகுல் குல்லார் தெரி வித் தார்.சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,480 கோடி டாலராக (1 லட்சத்து 19 ஆயிரத்து 40 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 36.3 சதவீதம் (1,820 கோடி டாலர் - 87 ஆயிரத்து 360 கோடி ரூபாய்) அதிகமாகும். இறக்குமதி: இதே மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 17.2 சதவீதம் உயர்ந்து, 3,450 கோடி டாலராக (1 லட்சத்து 65 ஆயி ரத்து 600 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக் குறை, சென்ற செப்டம்பர் மாதத்தில், 970 கோடி டாலராக (46 ஆயிரத்து 560 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. எனினும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. அதாவது, செப்டம்பர் மாதம் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரித்து, இறக்குமதி வளர்ச்சி குறைந்துள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் 14.1 சதவீதமாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, செப்டம்பரில் 9.7 சதவீதமாக குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதம் 44.20 சதவீதம் என்ற அளவில், சிறப்பான வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், 30 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. ஆறு மாத காலத்தில்: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவீதம் அதிகரித்து, 16 ஆயிரம் கோடி டாலராக (7 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள் ளது.இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 32.40 சதவீதம் வளர்ச்சியடைந்து, 23 ஆயிரத்து 350 கோடி டாலராக (11 லட்சத்து 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 7,340 கோடி டாலராக (3 லட்சத்து 52 ஆயிரத்து 320 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 103 சதவீதம் வளர்ச்சியடைந் துள்ளது. இதே போன்று, பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் பொருட்கள் (53 சதவீதம்), ஆபரணங்கள் மற்றும் நவரத்தி னங்கள் (23 சதவீதம்), ஆயத்த ஆடைகள் (32 சதவீதம்), கடல் உணவுப் பொருட்கள் (48 சதவீதம்) மற்றும் மருந்துப் பொருட்கள் (33 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதியும், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. புதிய சந்தைகள்: ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இதர ஆசிய நாடுகளில் உள்ள புதிய சந்தைகளுக்கு, ஏற்றுமதி செய்ததால், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற செப்டம்பர் மாதத்தில், எண்ணெய் இறக்குமதி,14.62 சதவீதம் அதிகரித்து, 920 கோடி டாலராக (44,160 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இதே மாதத்தில், எண்ணெய் சாராத பொருட்களின்இறக்குமதி மதிப்பு, 18.17 சதவீதம் வளர்ச்சி யடைந்து, 2,530 கோடி டால ராக (1 லட்சத்து 21 ஆயிரத்து 440 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி, 42.39 சதவீதம் வளர்ச்சியடைந்து, 4,940 கோடி டாலரிலிருந்து (2 லட்சத்து 37 ஆயிரத்து 120 கோடி ரூபாய்), 7,034 கோடி டாலராக (3 லட்சத்து 37 ஆயிரத்து 632 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதே காலத்தில், எண்ணெய் சாராத பொருட் களின் இறக்குமதி, 16 ஆயிரத்து 310 கோடிடாலராக (7 லட்சத்து 82 ஆயிரத்து 880 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 28.52 சதவீதம் (12 ஆயிரத்து 695 கோடி டாலர் - 6 லட்சத்து 9 ஆயிரத்து 360 கோடி ரூபாய்) அதிகமாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|