பதிவு செய்த நாள்
03 நவ2011
00:07
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த பருவத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, அளவின் அடிப் படையில், 20 சதவீதம் சரிவடைந்து, 19 ஆயிரத்து 195 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த அக்டோபர் முதல் செப் டம்பர் வரையிலான பருவத்தில், 24 ஆயிரத்து 119 டன்னாக இருந்தது என, காபி வாரியத்தின் புள்ளி விவரத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 255.45 கோடி ரூபாயிலிருந்து, 271.74 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த 2010ல் அக்டோபர் மாதத்தில், ஏற்றுமதிக்கான ஒரு டன் காபியின் விலை, 1 லட்சத்து 5 ஆயிரத்து 912 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு அக்டோபரில், 34 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 41 ஆயிரத்து 568 ரூபாயாக அதிகரித்துள்ளது. காபி விலை அதிகரிப்பால் தான், மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி உயர்ந்துள்ளது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஏழு மாத காலத்தில் (ஏப்ரல் - அக்டோபர்), நாட்டின் காபி ஏற்றுமதி, 18 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 10 ஆயிரத்து 562 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1 லட்சத்து 78 ஆயிரத்து 75 டன்னாக இருந்தது.நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில் (ஜனவரி-அக்டோபர்), இதன் ஏற்றுமதி, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 10 ஆயிரத்து 657 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 48 ஆயிரத்து 545 டன்னாக இருந்தது.நம் நாட்டிலிருந்து இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு, காபி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|