பதிவு செய்த நாள்
03 நவ2011
00:09
புதுடில்லி:நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலு மாக,99 லட்சத்து 18 ஆயிரத்து 52 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.இது,கடந்த நிதியாண்டின்இதே காலத் தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட,75 சதவீதம் (56 லட்சத்து 70 ஆயிரத்து 236 கோடி ரூபாய்) அதிகம் என, முன்பேர வர்த்தக சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம். சி.,) தெரி வித்துள்ளது. உள்நாட்டில், முன்பேர வர்த்தகத்தில், 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிறுவனங்களின், முன்பேர சந்தை களில் மிக அதிகளவில் தங்கம், வெள்ளி மற்றும் விளைபொருள்களின் மீது வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. எப்.எம்.சி., அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 24 லட்சத்து 83 ஆயிரத்து 380 கோடி ரூபாயி லிருந்து, 60 லட்சத்து 36 ஆயிரத்து 690 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விவசாயம் சார்ந்த விளைபொருள்கள் மீதான வர்த்தகம், 55 சதவீதம் வளர்ச்சிகண்டு,6 லட்சத்து 51ஆயிரத்து 609 கோடி ரூபாயிலிருந்து, 10 லட்சத்து 9 ஆயிரத்து 773 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவை தவிர,எரிபொருள் மற்றும் எரிசக்தி மீதான வர்த்தகம், 28.24 சதவீதம் உயர்ந்து, 11 லட்சத்து 39 ஆயிரத்து 451 கோடி ரூபாயிலிருந்து, 14 லட்சத்து 61 ஆயிரத்து 234 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கணக்கீட்டு காலத்தில், தாமிரம் உள்ளிட்ட இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, அதாவது, 13 லட்சத்து 95 ஆயிரத்து 768 கோடி ரூபாயிலிருந்து, 14 லட்சத்து 10 ஆயிரத்து 353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, எப்.எம்.சி., அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|