இ.சி.ஜி.சி. நிறுவனம் புதிய தலைவர் நியமனம்இ.சி.ஜி.சி. நிறுவனம் புதிய தலைவர் நியமனம் ... பங்குச் சந்தையின் சரிவு நிலையிலும் நிறுவனர்களின் பங்கு மூலதனம் ரூ.2,000 கோடி அதிகரிப்பு : -பிசினஸ் ஸ்டாண் டர்ட் உடன் இணைந்து- பங்குச் சந்தையின் சரிவு நிலையிலும் நிறுவனர்களின் பங்கு மூலதனம் ரூ.2,000 ... ...
முன்பேர வர்த்தக சந்தைகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2011
00:09

புதுடில்லி:நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலு மாக,99 லட்சத்து 18 ஆயிரத்து 52 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.இது,கடந்த நிதியாண்டின்இதே காலத் தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட,75 சதவீதம் (56 லட்சத்து 70 ஆயிரத்து 236 கோடி ரூபாய்) அதிகம் என, முன்பேர வர்த்தக சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம். சி.,) தெரி வித்துள்ளது. உள்நாட்டில், முன்பேர வர்த்தகத்தில், 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிறுவனங்களின், முன்பேர சந்தை களில் மிக அதிகளவில் தங்கம், வெள்ளி மற்றும் விளைபொருள்களின் மீது வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. எப்.எம்.சி., அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 24 லட்சத்து 83 ஆயிரத்து 380 கோடி ரூபாயி லிருந்து, 60 லட்சத்து 36 ஆயிரத்து 690 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விவசாயம் சார்ந்த விளைபொருள்கள் மீதான வர்த்தகம், 55 சதவீதம் வளர்ச்சிகண்டு,6 லட்சத்து 51ஆயிரத்து 609 கோடி ரூபாயிலிருந்து, 10 லட்சத்து 9 ஆயிரத்து 773 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவை தவிர,எரிபொருள் மற்றும் எரிசக்தி மீதான வர்த்தகம், 28.24 சதவீதம் உயர்ந்து, 11 லட்சத்து 39 ஆயிரத்து 451 கோடி ரூபாயிலிருந்து, 14 லட்சத்து 61 ஆயிரத்து 234 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கணக்கீட்டு காலத்தில், தாமிரம் உள்ளிட்ட இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, அதாவது, 13 லட்சத்து 95 ஆயிரத்து 768 கோடி ரூபாயிலிருந்து, 14 லட்சத்து 10 ஆயிரத்து 353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, எப்.எம்.சி., அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)