முன்பேர வர்த்தக சந்தைகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு வர்த்தகம்முன்பேர வர்த்தக சந்தைகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு வர்த்தகம் ... டி.டி.எச்., கட்டணங்கள் 30% எகிறும் வாய்ப்பு : ஐ.பி.எல்., போட்டிகளுக்கும் 25% வரி விதிப்பு டி.டி.எச்., கட்டணங்கள் 30% எகிறும் வாய்ப்பு : ஐ.பி.எல்., போட்டிகளுக்கும் 25% வரி ... ...
பங்குச் சந்தையின் சரிவு நிலையிலும் நிறுவனர்களின் பங்கு மூலதனம் ரூ.2,000 கோடி அதிகரிப்பு : -பிசினஸ் ஸ்டாண் டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2011
00:10

சர்வதேச நிலவரங்களால், இந்திய பங்குச் சந்தை சரிவடைந்துள்ள நிலையிலும்,டாட்டா,பஜாஜ் போன்ற தொழிலதிபர் கள், ஒட்டு மொத்த அளவில் தங்கள் நிறுவனங்களின் 15 கோடி பங்குகளை,2,000 கோடி ரூபாய்மதிப்பிற்கு வாங்கியுள் ளனர்.குறிப்பாக, சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பீ.எஸ்.ஈ-500 குறியீட்டு எண் கணக்கிட உதவும் 500 நிறுவனப் பங்குகளில் 73 நிறுவனங்களில், நிறுவனர்கள் பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொண்டுள்ளனர். சென்செக்ஸ்: கடந்த இரண்டை ஆண்டுகளாக சரிவை சந்தித்து வரும் பங்குச் சந்தை, மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம் பிக்கையின் அடிப்படையில், அவர்கள் இத்தகைய முதலீட்டை மேற்கொண்டுள்ளனர்.மேலும்,நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை தக்க வைத்துக் கொள்ளவும்,பங்குகளின் விலை வீழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனும், அவர்கள், தங்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில்,சர்வதேச நிதி நெருக்கடியின் தாக்கத்தால்,மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண் டில் தான், சென்செக்ஸ் அதிகபட்சமாக 12.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.நிறுவனர்களின் பங்கு முதலீடு அதிகரித் துள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களும், இந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவும், இந்நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. விதிமுறை: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி'யின் விதிமுறைப்படி, ஒரு நிறுவனத்தின் நிறுவனர், தம் நிறுவனத்தில் எந்தவொரு ஆண்டிலும் வெளிச்சந்தையிலிருந்து, 5 சதவீத பங்குகளை வாங்கலாம்.இதன்படி பங்கு மூல தனத்தை 75 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்.சென்ற ஜூன் மாதம், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தில், நிறுவனர்களின் பங்கு மூலதனம் 24.86 சதவீதமாக இருந்தது. இது, சென்ற செப்டம்பர் இறுதி நிலவரப்படி, 3.2 சதவீதம் அதிகரித்து 25.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், ஜிந்தால் ஸ்டீல் நிறுவனத்தில், நிறுவனர்களின் பங்கு முதலீடு 2.1 சதவீதம் உயர்ந்து, 58.39 சதவீதத்தில் இருந்து 58.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனர்களின் பங்கு முதலீடு, 2.1 சதவீதம் உயர்ந்து 34.84 சதவீதத்தில் இருந்து, 35.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர்களின் பங்கு முதலீடு, 1.5 சதவீதம் உயர்ந்து, 53.16 சதவீதத்தில் இருந்து, 53.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் நிறுவனர்கள் கொண்டுள்ள பங்கு முதலீடு, 1.1 சதவீதம் உயர்ந்து, 30.60 சதவீதத்தில் இருந்து, 30.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் மற்றும் ஜே.பி.அசோசியேட்ஸ் நிறுவனர்களின் பங்கு முதலீடு தலா 0.40 சதவீதம் அதிகரித்து முறையே 68.34 மற்றும் 46.89 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.சிறிய நிறுவனங்கள்: கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டு மின்றி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் நிறுவனர்களும் அதிகளவில், வெளிச் சந்தையிலிருந்து, தங்கள் நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளனர். சைலாக் சிஸ்டெம்ஸ் நிறுவனத்தில், நிறுவனர்களின் பங்கு முதலீடு 4.54 சதவீதம் உயர்ந்து, 36.68 சதவீதத்தில் இருந்து 41.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று,புரொவோக் (இந்தியா) நிறுவனர்களின் பங்கு முதலீடு, 3.08 சதவீதம் உயர்ந்து, 42.25 சதவீதத்தில் இருந்து, 45.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.பாம்பே டையிங் நிறுவனர்களின் பங்குமுதலீடு 2.95 சதவீதம் உயர்ந்து, 49.65 சதவீதத்தில் இருந்து 52.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராபைட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்கு முதலீடு, 2.77 சதவீதம் அதிகரித்து 57.23 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. பஜாஜ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்கு முதலீடு, 1.90 சதவீதம் உயர்ந்து, 38.11 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. விற்பனை: இவற்றுடன், ஐ.வி.ஆர். சி.எல்., பர்ஸ்வநாத் டெவலப்பர்ஸ், லான்கோ இன்ப்ராடெக், ஈ.ஐ.எச், ஓட்டல் லீலா வென்சர் மற்றும் கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனங்களின் நிறுவனர்களும், வெளிச் சந்தையிலிருந்து, அதிகளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.அதே சமயம், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ், எச்.ஈ. ஜி, எப்.டீ.சி மற்றும் ஜீ என்டெர்டெ#ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள், பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களிடம் இருந்து அதிகளவில் பங்குகளை வாங்கியுள்ளன. இதே காலத்தில், 17 நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனர்கள், 55 கோடி ரூபாய்அளவிற்கும், அன்னிய முதலீட்டாளர்கள் 10 ஆயிரத்து 565 கோடி ரூபாய்அளவிற்கும் பங்குகளை விற்பனை செ#துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)