பதிவு செய்த நாள்
04 நவ2011
00:29
சென்னை:கரூர் வைஸ்யா பேங்க், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 113.31 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தை விட 10.44 சதவீதம் (102.60 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலாண்டுகளில், வங்கியின் செயல்பாட்டு லாபம் 8.7 சதவீதம் அதிகரித்து, 145.07 கோடி ரூபாயிலிருந்து, 157.67 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருவாய்,24.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 174.19 கோடி ரூபாயிலிருந்து, 216.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய், 49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 518.38 கோடி ரூபா யிலி ருந்து, 772.05 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இவ்வங்கியின் நிகரலாபம் 23 சதவீதம் உயர்ந்து 230 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கி திரட்டிய டிபாசிட்டுகள், 28 சதவீதம் வளர்ச்சியடைந்து, 27 ஆயிரத்து 121 கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன்கள்,32 சதவீதம் வளர்ச்சிகண்டு, 20 ஆயிரத்து 216 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், வங்கியின் மொத்த வர்த்தகத்தை, 55 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|