பதிவு செய்த நாள்
04 நவ2011
00:30
சென்னை: இந்தியாவிலேயே மிகப் பெரிய பிரத்யேக லூயி பிலிப் விற்பனைக்கூடம், சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.லூயி பிலிப் பிராண்டு தலைவர் ஜேக்கப் ஜான் கூறியதாவது:சென்னை, அண்ணா நகரில், 10 ஆயிரம் சதுர அடி பரப்ப ளவில், மிகப் பிரமாண்டமாக இந்த பிரத்யேக விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடை உரிமை தவிர்த்து, நிர் வாக செயல்பாடுகள் தனி உரிமத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக விற்பனை கூடத்தில், "லக்சர்', "லூயி பிலிப்', "எல்.பி. லூயி பிலிப்' பிராண்டுகளின் சர்வதேச தரத்தில் உயர் வகை ஆயத்த ஆடைகள், சூட்டுகள், டை, சாக்ஸ், காலணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கலாம். இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிகளைக் கொண்டு, சர்வதேச தரத்திலான ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன."எல்.பி.லூயி பிலிப்' ஆடைகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.அடுத்த இரண்டாண்டுகளில் முக்கிய நகரங்களில் மேலும் இதுபோன்ற,12-15 பிரத்யேக விற் பனைக் கூடங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். உயர் ரக பிராண்டு ஆடைகள் சந்தையில், லூயி பிலிப் 20-25 சத வீத சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ளது.சென்ற நிதியாண்டில் அனைத்து பிராண்டுகளின் வாயிலாக விற்றுமுதல் 650 கோடி ரூபாயாக இருந்தது.இது,நடப்பு நிதியாண்டில் 900 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஜேக்கப் ஜான் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|