பதிவு செய்த நாள்
04 நவ2011
00:31
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு தீர்வு அளிப்பதற்கான நிதியுதவியை தாமதப்படுத்தி வருகின்றன. இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், வங்கி, உலோகம் போன்ற துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது. அதேசமயம், மின்சாரம், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 17.08 புள்ளிகள் அதிகரித்து, 17,481.93 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த் தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,527.10 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 17,278.03 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங்களுள்,17 நிறுவனப் பங்கு களின் விலை சரிவடைந்தும்,13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. இப்பங்குச் சந்தையில்,1,232 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 1,473 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும்,141 நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 7.30 புள்ளிகள் உயர்ந்து, 5,265.75 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்த கத்தின் இடையே அதிகபட்சமாக, 5,281.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,201.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|