பதிவு செய்த நாள்
04 நவ2011
00:33
புதுடில்லி:நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட, 3 சத வீதம் வளர்ச்சி கண்டு, 11.11 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், தேயிலை ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்து, 2.10 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. உற்பத்தி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தேயிலை உற்பத்தி, 10.81 கோடி கிலோவாகவும், இதன் ஏற்றுமதி, 1.93 கோடி கிலோவாகவும் இருந்தது. இருப்பினும், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, தேயிலை உற்பத்தி 13 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில், 12.70 கோடி கிலோவாக இருந்த உற்பத்தி, செப் டம்பர் மாதத்தில், 11.11 கோடி கிலோவாக குறைந்துள்ளது. நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாத காலத்தில், தேயிலை உற்பத்தி, 72.97 கோடி கிலோவாக அதிகரித்துள் ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத் தியை விட, 5 சதவீதம் (69.30 கோடி கிலோ) அதிகம் என்பது குறிப்பிடத் தக் கது.ஏற்றுமதி: இதே காலத்தில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 9 சதவீதம் சரிவடைந்து, 14.35 கோடி கிலோவிலிருந்து, 13.03 கோடியாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலத்தின் பங்களிப்பு, 50 சதவீத அளவிற்கு உள்ளது. இம்மாநிலத்தில், தேயிலை உற்பத்தி அதிகரித்ததையடுத்து, ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி உயர்ந்துள்ளது என, தேயிலை வாரியம் குறிப்பிட்டுள் ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 7 சதவீதம் அதிகரித்து, அதாவது, 6.28 கோடி கிலோ விலிருந்து, 6.70 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில், தேயிலை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 8.97 கோடி கிலோவிலிருந்து, 9.31 கோடி கிலோ வாக அதிகரித்துள்ளது.அதே சமயம்,தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில்,1.84 கோடி கிலோவிலிருந்து,1.80 கோடி கிலோவாக குறைந்துள் ளது.இதே மாதங்களில், வட மாநிலங்களிலிருந்து மேற்கொள் ளப்பட்ட தேயிலை ஏற்றுமதி, 1.12 கோடி கிலோவிலிருந்து, 1.15 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது என்றாலும், சென்ற செப்டம்பர் மாதத்தில்,இம்மாநிலங்களிலிருந்து மேற் கொள்ளப்பட்ட ஏற்றுமதி,81.30 லட்சம் கிலோவிலிருந்து, 95 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது. ஆறு மாத காலத்தில்: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்ரல்-செப்டம்பர்), நாட்டின் தேயிலை ஏற்று மதி, 9.07 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில்,8.95கோடி கிலோவாக இருந்தது.உலகளவில், தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது என்றா லும், தேயிலை பயன்பாட்டிலும், நம்நாடு முன்னிலையில் உள்ளது என, தேயிலை வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|