இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவுஇந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ... உணவுப் பொருள் பணவீக்கம் 12.21 சதவீதமாக அதிகரிப்பு உணவுப் பொருள் பணவீக்கம் 12.21 சதவீதமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி 11 கோடி கிலோவாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2011
00:33

புதுடில்லி:நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட, 3 சத வீதம் வளர்ச்சி கண்டு, 11.11 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், தேயிலை ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்து, 2.10 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. உற்பத்தி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தேயிலை உற்பத்தி, 10.81 கோடி கிலோவாகவும், இதன் ஏற்றுமதி, 1.93 கோடி கிலோவாகவும் இருந்தது. இருப்பினும், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, தேயிலை உற்பத்தி 13 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில், 12.70 கோடி கிலோவாக இருந்த உற்பத்தி, செப் டம்பர் மாதத்தில், 11.11 கோடி கிலோவாக குறைந்துள்ளது. நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாத காலத்தில், தேயிலை உற்பத்தி, 72.97 கோடி கிலோவாக அதிகரித்துள் ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத் தியை விட, 5 சதவீதம் (69.30 கோடி கிலோ) அதிகம் என்பது குறிப்பிடத் தக் கது.ஏற்றுமதி: இதே காலத்தில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 9 சதவீதம் சரிவடைந்து, 14.35 கோடி கிலோவிலிருந்து, 13.03 கோடியாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலத்தின் பங்களிப்பு, 50 சதவீத அளவிற்கு உள்ளது. இம்மாநிலத்தில், தேயிலை உற்பத்தி அதிகரித்ததையடுத்து, ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி உயர்ந்துள்ளது என, தேயிலை வாரியம் குறிப்பிட்டுள் ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 7 சதவீதம் அதிகரித்து, அதாவது, 6.28 கோடி கிலோ விலிருந்து, 6.70 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில், தேயிலை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 8.97 கோடி கிலோவிலிருந்து, 9.31 கோடி கிலோ வாக அதிகரித்துள்ளது.அதே சமயம்,தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில்,1.84 கோடி கிலோவிலிருந்து,1.80 கோடி கிலோவாக குறைந்துள் ளது.இதே மாதங்களில், வட மாநிலங்களிலிருந்து மேற்கொள் ளப்பட்ட தேயிலை ஏற்றுமதி, 1.12 கோடி கிலோவிலிருந்து, 1.15 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது என்றாலும், சென்ற செப்டம்பர் மாதத்தில்,இம்மாநிலங்களிலிருந்து மேற் கொள்ளப்பட்ட ஏற்றுமதி,81.30 லட்சம் கிலோவிலிருந்து, 95 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது. ஆறு மாத காலத்தில்: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்ரல்-செப்டம்பர்), நாட்டின் தேயிலை ஏற்று மதி, 9.07 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில்,8.95கோடி கிலோவாக இருந்தது.உலகளவில், தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது என்றா லும், தேயிலை பயன்பாட்டிலும், நம்நாடு முன்னிலையில் உள்ளது என, தேயிலை வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)