பதிவு செய்த நாள்
04 நவ2011
00:38
இந்தியாவில் வைர நகைகள் மற்றும் வைரங்கள் விற்பனை சரி வடைந்துள்ளது. அண்மையில் தீபாவளி பண்டிகையின் போது, ஆபரணங்கள் விற்பனை 10-15 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக, அமெரிக்கா வழங்கும் ஆபரணங்களுக்கான ஆர்டரும் ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால், இந்திய வைர நகைகள் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி: கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி போல், மீண்டும் உண்டாகும் என்று எதிர்பார்க்கப் படுவதால், இனி வரும் மாதங்களிலும் வைர நகை ஆபரணங்கள் விற்பனை குறையும் என்று டைமண்ட் டிரேடிங் கம்பெனி (டீ.டி.சி) மதிப்பிட்டுள்ளது. உலகில், வைரக் கற்கள் வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ள, டீ பீர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான டீ.டி.சி., கச்சா வைரக் கற்கள் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கு மாறு, அதன் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்களிடம் தெரிவித்துள்ளது. உற்பத்திக்கு தேவைப்படும் போது மட்டும், போதுமான நிதி இருக்கும் பட்சத்தில், அதற்கேற்ப வைரக் கற்களை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச மற்றும் இஸ்ரேல் வைர உற்பத்தியாளர் கள் சங்க தலைவர் மோதி கன்ஸ் கூறுகையில்," சென்ற 2010-11ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், உலகளவில் கச்சா வைரங்களுக்கான தேவை 120 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.இது, முந்தைய மூன்று காலாண்டுகளில், தலா 460 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது' என்றார். ஒதுக்கீடு:உலகின் மொத்த கச்சா வைரக் கற்கள் சப்ளையில், டீ.டி.சி.-யின் பங்களிப்பு 40 சதவீதமாக உள்ளது.இந்நிறுவனம், அதன் விற்பனையாளர் களுக்கான வைரக்கற்கள் ஒதுக்கீட்டை தலா, 30 கோடி டாலர் என்ற அளவிற்கு குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.இது, முன்பு 44 கோடிடாலர் என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது.உலகில்,வைரச்சுரகங்களில் இருந்து வெட்டியெடுக்கப்படும் மொத்த கச்சா வைரக்கற்களில்,பெரும்பகுதி, இந்தியாவில் தான் பட்டை தீட்டப்படு கின்றன.தற்போது,உற்பத்தி குறைந்து, கச்சா வைரக்கற்களின் விற்பனை சரிவடைந்துள்ளதால்,இந்தியாவில், வைரக் கற்களை வெட்டுதல் மற்றும் பட்டை தீட்டுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். விற்பனை: இது குறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் துணைத் தலைவர் சஞ்சய் கோத்தாரி கூறுகையில்," சென்ற ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீட்டை எஸ் அண்டு பி நிறு வனம் குறைத்ததைத் தொடர்ந்து, தங்கம் மற்றும் வைர ஆபரணங்களின் விற்பனை குறைந்துள்ளது. மக்கள், பொருள்களை வாங்குவதைக் குறைத்துக் கொண்டு, கையில் ரொக்க இருப்பை அதிகரிக் கவே விரும்புகின்றனர்' என்றார். மேலும், தங்கம் மற்றும் வைர நகைகளின் விலையும் உயர்ந்துள்ளதால், ஆபரணங்களில் முதலீடு செய்வதை மக்கள் குறைத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வைரக் கற்களை வெட்டுதல் மற்றும் பட்டை தீட்டுதல் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் ஆர்டர், அளவின் அடிப்படையில் 15-20 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதே சமயம், மதிப்பின் அடிப்படையில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்தியாவில் வைரக் கற்கள் பட்டை தீட்டும் தொழிலில் உள்ளோருக்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடப் பிறப்பையொட்டி, மூன்று மடங்கு ஆர்டர்கள் குவிவது வழக்கம். இது, பிப்ரவரி மாதத்தில் வரும் அன்னை யர் தினம் வரை தொடரும். ஆனால், இவ்வாண்டு நிலைமை சரியில்லை என்று கோத்தாரி மேலும் தெரிவித்தார். இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 4 லட்சம் பேர் வைரக் கற்களை வெட்டுதல், பட்டை தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி 2010ம் ஆண்டு வரை நீடித்த சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம்பேர், இத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவை:"அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, தங்க,வைர ஆபரணங்களுக்கான தேவை எந்த அள விற்கு உள்ளது என்று கூர்ந்து கவனித்து வருகிறோம்.இந்தியாவிலும்,திருமணக் காலம் தொடங்க உள்ளதால் ஆபர ணங்களுக்கான தேவை குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால், ஒட்டுமொத்த அளவில், இத்துறைக்கு சாதக மான அம்சங்கள் இதுவரை தென்படவில்லை' என குஜராத் ஹீரா போர்ஸ் நிறுவனத்தின் கூடுதல் செயலர் பிரவீன் நானா வதி கூறினார். இஸ்ரேலில் தற்போது, நிலைமை சீராகும் அறிகுறி தென்படுகிறது.எனினும் அடுத்த நிதியாண்டில், ஏப்ரல்-ஜூன் வரையிலான காலத்தில் தங்க,வைர ஆபரணங்களுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வது சாத்தியமல்ல என்று டயமண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரவீன் சங்கர் பாண்டியா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|