பதிவு செய்த நாள்
04 நவ2011
09:48
மும்பை : வாரவர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, பங்குவர்த்தகம் அதிக ஏற்றத்துடன் துவங்கியுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 220.33 புள்ளிகள் உயர்ந்து 17,702.26 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 60.35 புள்ளிகள் அதிகரித்து 5,326.10 என்ற அளவிலும் உள்ளது. எண்ணெய் மற்றும் கேஸ், வாகனங்கள், மெட்டல், ரியாலிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களின் பங்குமதிப்புக்ள் ஏறுமுகத்தில் இருந்ததன் காரணத்தினாலேயே, பங்குவர்த்தகம் பெருத்த ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக பங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிய பங்குச்சந்தைகளில், ஹாங்காங் பங்குச்சந்தை 3.39 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 1.05 சதவீத ஏற்றத்துடனும் துவங்கியுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|