ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... இந்தியா - சீனா பரஸ்பர வர்த்தகம் 10,000 கோடி டாலராக உயரும் இந்தியா - சீனா பரஸ்பர வர்த்தகம் 10,000 கோடி டாலராக உயரும் ...
பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்கமுடியாதது : ஐ.ஓ.சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2011
16:52

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.82 என்ற அளவிற்கு நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ள நிலையில், இந்த விலையுயர்வு தவிர்க்க முடியாதது என்று நாட்டின் முன்னணி எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறி்த்து, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன தலைவர் பி எஸ் பியூட்டோலா கூறியதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு தொடர்ந்து அதிகரி்த்து வருவது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்த விலை உயர்வு என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக,, பெட்ரோலின் விலை , செப்டம்பர் 16ம் தேதி அன்று உயர்த்தப்பட்டது. அப்போது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46.29 என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்றைய நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 49.40 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் தேவையில், நாம் 79 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளோம். கடந்த நிலையைக் கணக்கிடும் போது, அமெரிக்க டாலர் அளவில் பெ‌ட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.49 அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது, லிட்டருக்கு ரூ. 1.80 என்ற அளவில் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வி‌லை அதிகரிப்பு மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைப்பதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஆகும். சர்வதேச சந்தையில், நா‌ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருந்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில், தாங்கள் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலையை ஏற்றுவதில்லை. அவ்வாறு நாங்கள் இந்நேரம் ஏற்றிருந்தால், லிட்டருக்கு ரூ. 2.50 என்ற அளவில் விலை உயர்வு இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)