பதிவு செய்த நாள்
10 நவ2011
00:19
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், 3,470 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலா ண்டை விட, 48.60 சதவீதம் (2,364 கோடி ரூபாய்) அதிகம்.
இதே காலாண்டுகளில்,வங்கியின் மொத்த வருவாய், 37 ஆயிரத்து, 925 கோடியே,50 லட்சத்தில் இருந்து,41 ஆயிரத்து, 249 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வங்கி,2,810 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, கட ந்த ஆண்டின் இதே காலாண்டை விட,12.35 சதவீதம்(2,501 கோடி ரூபாய்) அதிகம்.தனிப்பட்ட மொத்த வருவாய், 23.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 23 ஆயிரத்து, 813 கோடியிலிருந்து, 29 ஆயிரத்து, 394 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலாண்டுகளில்,வங்கியின் வட்டி வருவாய்,19 ஆயிரத்து, 808 கோடியிலிருந்து, 25 ஆயிரத்து, 967 கோடி ரூபா யாக அதிகரித்துள்ளது.வங்கியின் செயல் பாட்டு லாபம் 6,357 கோடியிலிருந்து 7,474 கோடியாக ரூபாயாக உயர்ந் துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|