11-11-11 ஐ குறிக்கும் ரூபாய் நோட்டு11-11-11 ஐ குறிக்கும் ரூபாய் நோட்டு ... குருநானக் ஜெயந்தி : சந்தைகளுக்கு விடுமுறை குருநானக் ஜெயந்தி : சந்தைகளுக்கு விடுமுறை ...
மதுரை ஆவினில் "சிண்டிகேட்' அமைத்து டெண்டர் எடுத்ததால் ரூ.ஒரு கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2011
10:12

மதுரை:மதுரை ஆவினில் இருந்து பால் எடுத்துச் செல்ல, கடந்த ஆட்சியில் அரசியல்வாதிகள் "சிண்டிகேட்' அமைத்து, டெண்டர் எடுத்ததால், நிர்வாகத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பு ஏற்பட்டது. இம்முறையும் இழப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயன்றதால், மறுடெண்டர் விடப்படவுள்ளது.மதுரை ஆவினில் இருந்து தினமும் 42 வழித்தடங்களுக்கு, பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக இரண்டரை மெட்ரிக் டன் மற்றும் ஐந்தரை மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, டெண்டர் விடப்படும்.
இதற்கான அறிவிப்பு வெளியானவுடன் சுறுசுறுப்பு அடையும் அரசியல்வாதிகள், வெளியாட்களை உள்ளே அனுமதிக்காமல், பினாமி பெயரில் கூடுதல் விலைக்கு விண்ணப்பித்து டெண்டர் எடுக்கின்றனர். கடந்த ஆட்சியில், தி.மு.க., நிர்வாகிகளுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் "சிண்டிகேட்' அமைத்து கூடுதல் விலைக்கு டெண்டர் எடுத்தனர். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு லாரி ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கமிஷனும் தந்தனர்.
குறைந்த விலையில் டெண்டர் எடுக்க ஆள் இருந்தும், கூடுதல் விலையில் எடுக்க "சிண்டிகேட்' அமைத்த அரசியல்வாதிகளால் ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில், 2011-13ம் ஆண்டிற்கான டெண்டர் நேற்று விடப்பட்டது. இதை முன்கூட்டியே அறிந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தங்களுக்கு சில வழித்தடங்களை ஒதுக்குமாறு அதிகாரிகளை மிரட்டினர். இவர்களை தொடர்ந்து, பகுதி, வட்ட செயலாளர்களும் மிரட்டினர். ஆனால் அதிகாரிகள் வழித்தடம் ஒதுக்க மறுத்து விட்டனர்.இதன்காரணமாக, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெண்டர் விடப்பட்டது. ஒவ்வொரு வழித்தடத்திற்கும் குறைந்தது மூன்று பேராவது விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியினரின் மிரட்டலாலும், "சிண்டிகேட்' அமைக்க போவதாலும் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒருவர், இருவர் என மொத்தமே 57 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதில் இரு வழித்தடங்களுக்கு மட்டும் மூன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்தனர். இதனால் அதற்கு மட்டும் டெண்டர் விடப்பட்டது. மற்ற வழித்தடங்களுக்கு மறுடெண்டர் விட ஆவின் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)